நட்சத்திரங்களும் அதற்கேற்ற மரங்களும்

மரம் வளர்ப்போம் என்று கூறுவார்கள். மரம் இருந்தால்தான் மழை வரும், நல்ல காற்று கிடைக்கும். மரங்கள் நம் வாழ்வோடு ஒன்றியிருக்கிறது. நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வளர்த்தால் நல்லது. பொதுவாக மரத்திற்கு நல்ல சக்தி உண்டு, மருத்துவ குணம் உண்டு. சித்தர்கள் மற்றும் முனிவர்கள் பலரும் காடுகளில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. எனவே இயற்கையை நேசிக்கவேண்டும். மரங்களை வளர்க்கவேண்டும். மரம் இருந்தால்தான் மழை கிடைக்கும்.
நட்சத்திரங்களும் அதற்கேற்ற மரங்களும்
1. அஸ்வினி  - எட்டி
2. பரணி - நெல்லி
3. கிருத்திகை - அத்தி
4. ரோகிணி - நாவல்
5. மிருகசீரிஷம் - கருங்காலி
6. திருவாதிரை - செங்கருங்காலி
7. புனர்பூசம் - மூங்கில்
8. பூசம் - அரசு
9. ஆயில்யம் - புன்னை
10. மகம் - ஆலமரம்
11. பூரம் - பலா
12. உத்திரம் - அலரி
13. ஹஸ்தம் - அத்தி
14. சித்திரை - வில்வம்
15. சுவாதி - மருதம்
16. விசாகம் - விளா
17. அனுஷம் - மகிழம்
18. கேட்டை - பிராய்
19. மூலம் - மா
20. பூராடம் - வஞ்சி
21. உத்திராடம் - பலா
22. திருவோணம் - எருக்கு
23. அவிட்டம் - வன்னி
24. சதயம் - கடம்பு
25. பூரட்டாதி - தேமா
26. உத்திரட்டாதி - வேம்பு
27. ரேவதி - இலுப்பை