வனத்துறை தொடர்பான தகவல்கள்

************************************************************************************

வனத்துறையில் வனச்சரக அலுவலராக பதவி உயர்வு பெற 
வனச்சட்டம் ( FOREST LAW -  PAPER I & PAPER II ) மற்றும் அலுவலக நடைமுறை மற்றும் கணக்கு ( OFFICE PROCEDURE AND ACCOUNTS
 - PAPER I & PAPER II ) ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சிபெறவேண்டும். 

*************************************************************************************

டிசம்பர் 2014 ம் ஆணடு நடத்தப்பட்ட தேர்வின் வினாத்தாள் மாதிரிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.


Code 069 -  

DEPARTMENTAL TEST FOR  FOREST SUBORDINATE SERVICE OFFICERS

FOREST LAW - FIRST PAPER (Without book) December 2014




 

******************************************************************************

Code 106 -  

DEPARTMENTAL TEST FOR  FOREST SUBORDINATE SERVICE OFFICERS

FOREST LAW - SECOND PAPER (With book)  December 2014



 


*****************************************************************************
வனத்துறையின் துறைத்தேர்வு (Departmental Exam) முடிவுகள் 
அறிவிக்கப்பட்டுள்ளது காண்பதற்கு 
இங்கே கிளிக் செய்யவும்

******************************************************************************

உயிரிழந்த வனத்துறை அதிகாரி

சத்தியமங்கலம் (திம்பம் -தலமலை) வனப்பகுதியில் பணியில் இருந்த வனக்காப்பாளர் கிருஷ்ணன் என்பவரை 17.07.2014 இரவு சுமார் 8.30 மணியளவில் சிறுத்தைக்கொன்று அவருடைய பாதி உடலை தின்றுவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது மிகவும் வருந்தத்தக்கது. அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.

 



    வனம் என்பது நாட்டின் மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் நாடு மற்றும் அதன் சூழல் நன்றாக இருக்கும், டாக்டர் ஸ்கிலிச் என்ற வனவியல் அறிஞர் மரங்களும் மற்றும் வனப்பொருட்களும் விளைவதற்கென்றோ கெடுதல் விளைவிக்கும் தட்ப வெப்ப நிலைகளிலிருந்து அருகிலுள்ள நிலங்களைக் காப்பாற்றுவதற்கென்றோ ஒதுக்கி வைக்கப்பட்ட இடமே வனம் அல்லது காடு என்று விளக்கம் தருகிறார். எனவே காட்டினைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பே மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவ்வேலையை மேற்கொள்ளும் வனத்துறையைச் சேர்ந்தவர்கள் போற்றுதற்குரியோர்கள் ஆவார்கள்.

               வனத்தை பாதுகாக்கும் பணியில் இருக்கும் ஒருவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம் என்ன என்பதை முதலில் கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே வனம் நன்றாக இருக்கும். இந்தியா ஒரு விவசாய நாடு, எனவே விவசாயத்திற்கான நீர் வளத்திற்கு மழையை நம்ப வேண்டியுள்ளது. மழைவேண்டுமெனில் அடர்ந்த மரங்கள் இருக்கவேண்டும் அதற்கு காடு மிகவும் முக்கியம். இவ்வாறு முக்கியமான ஒரு துறையான வனத்துறையில் பணியில் இருக்கும்போது இப்படி ஒரு மரணம் ஏற்பட்டால் அது அவருடைய குடும்பத்தை மட்டும் பாதிக்காது ஒவ்வொரு ஊழியரையும் சிந்திக்கவைக்கும். காரணம் பணியில் பாதுகாப்பு இல்லையோ என்ற அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்திவிடும். பொதுவாக வனத்துறையில் வேலை செய்வோர் காட்டுக்குள் செல்வதுமட்டுமல்லாமல் அங்கேயே தங்கியிருக்கவேண்டும். அப்படி தங்கியிருக்கும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்பதை அரசு மற்றும் அதிகாரிகள் சிந்திக்கவேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், ஊதியம் மற்றும் பிற வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றை ஆராய்ந்து வன ஊழியர்களையும் வனத்தையும் பாதுகாக்கவேண்டும்.


Wild Life Photograph