வன உயிரினம் - தாவரங்கள்


                                       பனைமரம் - மாநில மரம்

தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரமாகும். இதன் அறிவியல் பெயர் பொராசஸ் பிலாபெல்லிபர் ஆகும். தற்போது இம்மாநில மரமானது அழிந்து வரும் பாரம்பரியங்களில் ஒன்றாக வருகிறது. இதற்கு காரணம் இதன் நன்மைகளை நாம் அறியாததேயாகும். 


பனைமரத்திலிருந்து கிடைக்கும் பனை நுங்கு நன்மைகள் பல தரக்கூடியது ஆகும்.  தமிழ்நாட்டின் மாநிலமரமாக இருக்கும் இம்மரத்தை இத்தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறியாமல் இருந்தாலும் அதிலிருந்து கிடைக்கும் பனை நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களைத்தருகிறது. 


வெயில் காலசூட்டிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைநுங்கு. கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர் சத்துக்களை வாரி வழங்குகிறது பனை நுங்கு. 

பனைவெள்ளம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை. பனை நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி மற்றும் சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், டையமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.

பனை நுங்கிற்கு கொழுப்பைக்கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பனை நுங்கை சாப்பிடலாம். பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே பனை நுங்கு மருந்தாக பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் கு்டித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.


இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்லமருந்தாகும். நுங்கில் காணப்படும் ஆந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்திகொண்டது. நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது பனை நுங்கு.


இத்தகைய ஆற்றல் கொண்ட இம்மாநில மரத்தை பாதுகாத்து இயற்கையை காப்போம் நம் வருங்கால சந்ததியினரை காப்போம்.

********************************************************************

வன உயிரினம் - விலங்கினங்கள்

                                             
                                            தேள்

உலகில் 600 வகையான தேள்கள் வாழ்கின்றன.

கடுங்குளிர் பகுதியானாலும், வெப்பப்பகுதியானாலும் தேள் உயிர் வாழும். உணவின்றி பல மாதங்களும் பனிப்பகுதியில் கிடக்க இதனால் முடியும்.


தேள் சாதாரணமாக தண்ணீர் குடிப்பதில்லை, உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்தே தனக்குத் தேவையான தண்ணீரைப் பெறுகிறது.
தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டால் தேள் தன்னைத் தானே கொட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும்.
கடுமையான விஷமுள்ள தேள் ஒருவரைக் கொட்டியபிறகு 30 நாட்களுக்கு வேரு யாரையும் கொட்டுவதில்லை.

 ******************************************************************************

                                      ஆண் சிங்கத்தின் களங்கம்
 
இதுநாள்வரை விஞ்ஞானிகள் ஆண்சிங்கம் சோம்பேறி என்றும் அது வேட்டையாட போகாது என்றும், பெண்சிங்கங்கள் தான் வேட்டையாடி வந்து பிள்ளைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றும் என கூறிவந்தார்கள். ஆண் சிங்கங்களுக்கு ஏற்பட்ட இந்த களங்கத்தை ஒரு புதிய ஆய்வு முடிவுகள் துடைத்துள்ளன. கார்னிகி பல்கலைக்கழக பேராசிரியர்களால் சிங்கங்களின் உடலில் அதிநவீன ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தெரிய வந்த விஷயம் என்னவெனில்


பெண்சிங்கங்கள் பகலில் கூட்டமாக வேட்டையாடும். ஆண் சிங்கங்கள் இரவில்தான் வேட்டையாடும். ஊர் அடங்கியவுடன் ஆண் சிங்கம் வேட்டைக்கு கிளம்பி தனியாக பொறிவைத்து (ஆம்புஷ்) இரையை வேட்டையாடும். இதுநாள்வரை சிங்கங்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் பகலில் ஆண் சிங்கம் தூங்குவதை வைத்து அதை சோம்பேறி என முடிவு கட்டிவிட்டனர். அது தவறு என இந்த ஆய்வு கூறுகிறது. ஆக ஆண் சிங்கம் சோம்பேறி அல்ல. பகலில் மனைவியை வேலைக்கு செல்ல அனுமதித்து குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பேபிசிட்டர். மனைவி வீடு திரும்பியவுடன் ஆண்சிங்கம் பொறுப்பா வேலைக்கு போய்வருகிறது.
நன்றி: பாக்யா வார இதழ்


*****************************************************************************

 முதலைகள்  (Crocodile)

கங்கை நீர் முதலை  (Gharial)

       சிந்து கங்கை பிரம்மபுத்திரா மற்றும் மகா நதிகளில் உள்ளன. இவற்றை ஆங்கிலத்தில் கரியால் (Gharial) என்று அழைப்பர். ஆண் முதலைகளுக்கு மூக்கின் நுனி பானை போன்று அமைந்திருப்பதால் இப்பெயர் உண்டாயிற்று. 


            ஒரு காலத்தில் இவை எங்கும் காணப்பட்டது. வேட்டையாடலால் இவை குறைவுற்று மேற்குறிப்பிட்ட நதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இவை நீரில் நன்றாக வேகமாக நீந்தக்கூடியவை. நிலத்தில் இவற்றின் செயல்திறன் குறைவு. 

        வயதான முதலைகள் சூரிய ஒளியில் குளிர்காயும். இவற்றின் பிரதான உணவு மீன். பெண் முதலைகள் கரைகளின் ஓரத்தில் ஆழத்தில் 40 முட்டைகள் வரையிடும். இவை குட்டிகளை நன்றாக பாதுகாக்கும். 13 அல்லது 14 வயதில் முதிர்ச்சியடையும். 

        டிசம்பர், ஜனவரியில் இனப்பெருக்கம் செய்யும். மணற்பரப்பில் கூடமைத்து முட்டைகளிட்டு 32  - 34 டிகிரி வெப்பநிலையில் அடைகாக்கும்.    
********************************************************************************

                                                         புலி  (Panthera tigris)


உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: பூனைக்குடும்பம்
பேரினம்: உறுமும் பூனைகள்
இனம்: Panthera tigris
Subspecies
P. t. bengalensis
P. t. corbetti
Panthera tigris jacksoni
P. t. sumatrae
Panthera tigris altaica
Panthera tigris amoyensis

                                                                    புலி
புலி (பாந்தெரா தீகிரிஸ்)(Panthera tigris) என்னும் பூனையினத்தைச் சேர்ந்ததாகும். பாந்தெரா இனத்தின் நான்கு "பெரிய பூனையினங்களில்" இதுவே மிகப் பெரியதாகும். இதன் பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா ஆகும். புலி உயர்நிலை ஊனுண்ணியும், ஆதிக்கமிக்க ஊனுண்ணியும் ஆகும். 4 மீட்டர்கள் (13 அடிகள்) வரை நீளமும் 300 கிலோகிராம் (660 பவுண்டுகள்) வரை எடையும் உடையது. கொழுத்த உடலும் திறனும் மட்டுமின்றி அவற்றின் உடலில் உள்ள வெள்ளையிலிருந்து ஆரஞ்சு வரையிலுள்ள நிறத்திலும், அதற்குப் பக்கத்தில் கருப்பு நிறத்திலும் உள்ள பட்டைப் பட்டையான வரிகளும் வெளிர் நிற அடிப்பகுதியுமே அவற்றின் நினைவுகூறத்தக்க முக்கிய சிறப்பம்சங்களாகும். புலி இனத்தின் மிகப் பெரிய உள்ளினம், சைபீரியன் புலி என்பதாகும். சிங்கம் பசி இல்லாதபோது மிருகங்களைக் கொல்வதில்லை. அதனால் பொதுவாகச் சிங்கத்தைக் காட்டுக்கு அரசன் எனக் கூறினாலும் கிழக்காசிய நாடுகளில் புலியே காட்டின் அரசன் என்று சொல்வார்கள். புலியின் நெற்றியில் 王 என்ற அடையாளம் போல இருக்கும். அது சீனா எழுத்தில் அரசன் என்பதை குறிக்கும். வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது, அங்கோரா விலங்குப் பூங்காவில் ஒரு புலி ஒரே அடியில் சிங்கத்தைக் கொன்றுவிட்டது, இது 2011 மார்ச்சில் நிகழ்ந்தது.

பரந்த தகவமைப்பு கொண்ட இனமான புலிகள், சைபீரியாவின் டைகா(குளிரும் மரங்களும் நிறைந்த பகுதிகள்) முதல் திறந்த புல்வெளிகள் வரை, நிலநடுக்கோட்டுப் பகுதியின் மாங்குரோவ் சதுப்பு நிலங்கள் வரையிலும் பரவி உள்ளன. இவை பிரதேசம் சார்ந்தவை, பொதுவாக இவை தனிமையாக வாழ்பவை ஆகும். இவற்றுக்கு வேட்டையாடும் தேவைக்கு ஏற்ப தொடர்ச்சியான பரந்த வாழிடப்பரப்பு தேவைப்படுகிறது. இந்தக் காரணத்தினால் தான் பூமியின் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் இவை வாழும்போது அப்பகுதிகளில் மனிதர்களுடன் பல குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உண்டாகிறது. நவீன புலிகளின் ஒன்பது உள்ளினங்களில் மூன்று அழிந்துவிட்டன. மீதமுள்ள ஆறு உள்ளினங்கள் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில மிக ஆபத்தானவை. முதன்மையான நேரடிக் காரணங்கள், சொந்த வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் வாழிடத்தைப் பகுதிகளாகப் பிரித்தல் மற்றும் வேட்டையாடுதல், வரலாற்றுப்படி முதலில் மெசபடோமியா மற்றும் கவுகசஸில் இருந்து தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வரை இருந்த இவற்றின் எல்லையானது தற்போது குறிப்பிடுமளவுக்குக் குறைந்துள்ளது. வாழும் அனைத்து இனங்களும் சாதாரணமான பாதுகாப்பின் கீழ் இருக்கும் நிலையில் சட்டத்திற்குப் புறம்பான வேட்டை, சொந்த வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் அக-இனப்பெருக்கத்தாலான பாதிப்பு ஆகியவை தொடர்ந்த அச்சுறுத்தல்களாக உள்ளன.

எனினும் புலியே உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமாக அறியப்பட்டதாகவும் உள்ளது. அவை பழம் புராணங்களிலும் நாட்டுப்புற இலக்கியங்களிலும் முக்கிய இடம்பெற்றுள்ளன. தற்காலத் திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. புலிகளின் உருவமானது பல கொடிகளிலும் இடம்பெறுகிறது. விளையாட்டு அணிகளுக்குச் சின்னங்களாகவும் பல ஆசிய நாடுகளின் தேசிய விலங்காகவும் உள்ளது.


பெயரிடுதலும் சொற்பிறப்பு

"டைகர்" என்ற சொல் "தீகிரிஸ் " என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தக் கிரேக்கச் சொல்லானது பாரசீக மொழியில் அந்த விலங்கின் வேகத்தைக் குறிப்பிடும் வகையில் "அம்பு" எனப் பொருள்படும் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம். மேலும் டைகிரிஸ் என்ற நதியின் பெயரிலிருந்தும் பிறந்திருக்கலாம். அமெரிக்க ஆங்கிலத்தில் "தீகிரிஸ்" என்ற சொல் முதலில் 1611 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. லின்னேயஸின் இயற்கையின் அமைப்பு என்ற அவரது 18 ஆம் நூற்றாண்டுக் கொள்கையில் விவரிக்கப்படும் பெரும்பாலான இனங்களில் ஃபெலிஸ் டைகிரிஸ் எனப்படும் இதுவும் ஒன்றாகும். அதன் பேரினத்தின் அறிவியல் பெயரான பாந்தெரா தீகிரிஸ், என்ற சொல் பான்- ("அனைத்திலும்") மற்றும் தெரான் ("சிறந்தது") என்ற கிரேக்கச் சொற்களிலிருந்து உருவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இது ஒரு வாய்வழிச் சொல் வரலாறாக இருக்கலாம். பாந்தெரா என்ற சொல்லானது செம்மொழிகளின் வழியாகவே ஆங்கிலத்திற்கு வந்திருந்தாலும் பெரும்பாலும் அது கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதன்படி இச்சொல்லுக்கு "மஞ்சள் நிற விலங்கு" அல்லது "வெளிர் மஞ்சள்" எனப் பொருள்.

புலிகளைக் குழுவாகக் காண்பது அரிது ஆனால் அவ்வாறு காணப்படும்போது அவை 'ஸ்ட்ரீக்' அல்லது 'அம்புஷ்' என அழைக்கப்படுகின்றன.

தற்போது பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வாழிட எல்லை வரம்பானது மேற்கில் இந்தியாவிலிருந்து கிழக்கில் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை பரவியுள்ளது. வடக்கு எல்லையானது தென்கிழக்கு சைபீரியாவில் அமுர் நதியுடன் முடிகிறது. தற்காலத்தில் புலிகள் வாழும் பெரிய தீவு சுமத்ரா மட்டுமே. ஜாவா மற்றும் பாலி தீவுகளில் இருந்த புலிகள் 20ஆம் நூற்றாண்டில் அழிந்துவிட்டன. மேலும் போர்னியோவில் எஞ்சியுள்ள புதைபடிவங்களில் மட்டுமே அறியப்படுகின்றன.

இயற்பியல் குணங்கள், வகைப்பாடு மற்றும் பரிணாமம்

பழமையான பாந்தெரா பாலயோஸினென்ஸிஸ் எனப்படும் புலி போன்ற பூனை இனத்தில் மிஞ்சியவை. இவை சீனாவிலும் ஜாவாவிலும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இனமானது 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ப்ளெஸ்டோஸீன் யுகத்தின் (இருபது இலட்சமாவது ஆண்டு முதல் தற்காலத்திலிருந்து 11,000 ஆண்டுகள் முன்பு வரையிலான காலம்) தொடக்கத்தில் வாழ்ந்தன. மேலும் இவை தற்காலத்திலுள்ள புலியை விடச் சிறியவையாக இருந்தன. மிகப் பழமையான புலிகளின் புதைபடிவங்கள் ஜாவாவிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவை 1.6 முதல் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை. மத்திய ப்ளெஸ்டோஸீன் யுகத்தின் முற்பகுதிக் காலத்தைச் சேர்ந்த பழமையான புதைபொருட்களிலிருந்து வேறுபட்ட புதைபடிவங்கள் சீனா மற்றும் சுமத்ரா பகுதிகளின் படிவுகளிலிருந்து கிடைத்துள்ளன. ட்ரினில் டைகர் (பாந்தெரா டைகிரிஸ் ட்ரினிலென்ஸிஸ்) என்றழைக்கப்படும் உள்ளினமானது 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது. மேலும் இவற்றின் புதைபடிவங்கள் ஜாவாவின் ட்ரினில் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புலிகள் முதலில் இந்தியா மற்றும் ப்ளெஸ்டோஸீன் யுகத்தின் பிற்பகுதியில் கிழக்கு பெரிஞ்சியா (அமெரிக்கக் கண்டமல்ல), ஜப்பான் மற்றும் சக்கலின் ஆகிய பகுதிகளை அடைந்து வடக்கு ஆசியாவை அடைந்தன. ஜப்பானில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களிலிருந்து அந்தப் பகுதிகளில் வாழ்ந்த புலிகள், தற்போது தீவுப் பகுதியில் வாழும் உள்ளினங்கள் போலவும் பிராதனப் பகுதியில் வாழ்ந்தவற்றைவிடச் சிறியதாகவும் இருந்தன. உடலளவானது வாழும் இடத்தோடு தொடர்புடையதாக இருப்பதோ அல்லது வேட்டையாட உணவு கிடைக்கும் அளவோ இதற்குக் காரணமாக இருக்கலாம். ஹோலுஸீன் காலம் (கடந்த 10,000 ஆண்டுகள்) வரை, புலிகள் போர்னியோவிலும் ஃபிலிப்பைன்ஸின் பாலவான் தீவிலும் வாழ்ந்தன.

இயற்பியல் குணங்கள்

சைபீரியன் புலி
பூனை இனத்திலேயே மிகவும் நினைவுகூறத்தக்க பெரிதும் அறியப்படுபவையாக இருப்பவை புலிகளே ஆகும் (சிங்கம் நீங்கலாக). இவை துரு-சிவப்பு நிறத்திலிருந்து பழுப்பு-துரு நிற மேல்தோலைப் பெற்றுள்ளன. இவற்றின் நடுப் பகுதியும் அடிப்பகுதியும் வெண்ணிறத்தில் உள்ளன. முகத்தைச் சுற்றி ஒரு வெண்ணிற "வளையம்" காணப்படுகிறது. பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலிருந்து துல்லியமான கருப்பு வரை வேறுபடும் பட்டை பட்டையான வடிவமைப்பும் காணப்படுகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமும் அடர்த்தியும் உள்ளினங்களிடையே வேறுபடுகின்றன (இதே போல் உரோமங்களின் அடிப்படை நிறமும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாகச் சைபீரியன் புலிகள் பிற புலிகளை விட வெளிர்நிற உரோமங்களைக் கொண்டுள்ளன). ஆனால் பெரும்பாலான புலிகள் சராசரியாக 100 பட்டைகளைக் கொண்டுள்ளன. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது ஒவ்வொரு விலங்கிற்கும் தனிப்பட்ட விதத்தில் அமைந்துள்ளது. மேலும் இவற்றைக் கொண்டு தனித்தனியாக அவற்றை அடையாளங்காண முடிகிறது. இது மனிதர்களை அடையாளங்காண கைரேகைகளைப் பயன்படுத்துவதைப் போன்றதாகும். இருப்பினும் காட்டுப்புலியின் பட்டையின் வடிவமைப்பைப் பதிவு செய்வதில் உள்ள சிரமத்தின் காரணமாக இந்த அடையாளங்காணும் முறையானது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. புலிகள் வேட்டைக்காகச் செல்லும்போது பல நிறத்தாலான நிழல்களிலும் நீண்ட புல்வெளிகளிலும் தங்களை மறைத்துக்கொள்ள இந்தப் பட்டைகள் உதவுவதால் இவை தோற்ற மறைப்பு செயலுக்கு உதவுவதற்கான அம்சமாகத் தெரிகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது புலியின் தோலில் இருக்கிறது. அதன் உரோமங்களை மழித்தெடுத்தாலும் இந்தப் பட்டை அமைப்புகள் நீக்கப்படுவதில்லை. பிற பெரிய பூனைகளைப் போலவே புலிகளின் காதுகளின் பின் பகுதியிலும் ஒரு வெண்ணிறப் புள்ளி உள்ளது.

எலும்புக்கூடு
காட்டில் காணப்படும் பூனைகளில் மிகப் பெரியதாக இருப்பது புலிகளின் கூடுதல் தனித்தன்மையாகும். மிக வலுவான கால்களையும் தோள்களையும் பெற்றுள்ள இவை சிங்கங்களைப் போலவே பெரும்பாலும் தன்னை விட எடையில் அதிகமான விலங்குகளையும் இழுத்து வேட்டையாடக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. இருப்பினும் பெர்க்மானின் விதியால் தீர்மானிக்கப்பட்டபடி வளர்ச்சியானது அகலக்கோட்டுக்கு நேர்விகிதத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. மேலும் குறிப்பிடுமளவுக்கு அளவில் இவை பெரிதும் வேறுபடுகின்றன. இப்படி பெரிய ஆண் சைபீரியன் புலிகள் (பாந்தெரா டைகிரிஸ் அல்டைக்கா) "வளைவுகளுடன் சேர்த்து அளவிடுகையில்" ("கால்களுக்கிடைப்பட்ட தூரம்" 3.3 மீ) 3.5 மீ வரையிலான நீளமும் 306 கிலோகிராம்கள் எடையும் கொண்டவை, இவை சுமத்ரா தீவுகளில் வாழும் 75-140 கி.கி எடை கொண்ட சிறிய புலிகளைக் காட்டிலும் குறிப்பிடுமளவு மிகப் பெரியவை. ஒவ்வொரு உள்ளினத்திலும் பெண் புலிகள் ஆண் புலிகளை விடச் சிறியதாகவே உள்ளன. பெண் புலிகளைக் காட்டிலும் 1.7 மடங்கு அதிக எடை கொண்ட ஆண் புலிகள் கூட உள்ளதால் பெரிய உள்ளினங்களில் ஆண் மற்றும் பெண் புலிகளுக்கிடையே உள்ள அளவு வேறுபாடானது குறிப்பிடத்தக்கது. கூடுதலாகப் பெண் புலிகளை விட ஆண் புலிகள் அகலமான முன் பாதங்களைப் பெற்றுள்ளன. இந்தப் பெரும் வேறுபாட்டை உயிரியலாளர்கள் புலிகளின் வழித் தடத்தை வைத்து அவற்றின் பாலினத்தைக் கண்டறியப் பயன்படுத்துகின்றனர். முன்பகுதியில் தாழ்ந்தோ அல்லது தட்டையாகவோ இல்லாவிட்டாலும் புலியின் மண்டை ஓடானது சிங்கத்தின் மண்டை ஓட்டைப் போலவே உள்ளது. இது சிறிது நீண்ட விழிகுழியின் பின் பகுதியைக் கொண்டுள்ளது. சிங்கத்தின் மண்டை ஓடானாது அகன்ற நாசித் துளைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் இவ்விரு இனங்களுக்குமான மண்டை ஓட்டின் வேறுபாட்டின் அளவு குறைவாக இருப்பதன் காரணமாக வழக்கமாகக் கீழ்த் தாடையின் அமைப்பைப் பயன்படுத்துவதே இனங்களை அறிவதற்கு நம்பகமானது.

கிளையினம்

வங்கப்புலி
புலி இனத்தில் எட்டு கிளையினங்கள் உள்ளன, அவற்றில் இரண்டு அழிந்துவிட்டன. வரலாற்றின்படி இவை இந்தோனேசியாவின் சில தீவுகள் உட்பட வங்காளதேசம், சைபீரியா, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா எனப் பரவியிருந்தன (தற்சமயம் வெகுவாகக் குறைந்துவிட்டன). தற்சமயம் வாழும் கிளையினங்கள், அவற்றின் வன உயிர்த்தொகையின் இறங்கு வரிசையில் இங்கே தரப்பட்டுள்ளன:

வங்கப்புலி அல்லது வங்காள அரசப்புலி (பாந்தெரா டைகிரிஸ் டைகிரிஸ்), இவை இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூடான் மற்றும் பர்மா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இதன் வெவ்வேறு வாழ்விடங்கள்: புல்வெளிகள், துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகள், புதர்க்காடுகள், ஈரப்பத மற்றும் வறண்ட இலையுதிர்க்காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகும். பொதுவாகக் காடுகளில் உள்ள ஆண்புலிகளின் எடை 205 முதல் 227 கி.கி (450-500 பவுண்ட்) ஆகவும், பெண்புலிகளின் சராசரி எடை 141 கி.கி வரையிலும் இருக்கும். இருப்பினும், வட இந்தியப் புலிகளும் வங்கப்புலிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதிகளில் காணப்படுபவற்றை விடச் சற்று கொழுத்தவையாக உள்ளன. இந்த ஆண் புலிகள் சராசரியாக 235 கிலோகிராம்கள் (518 lb) எடை கொண்டவையாக உள்ளன.  ஏற்கனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், புலிகளின் எண்ணிக்கை 2000-த்திற்கும் குறைவாக இருப்பதாக நம்பினார்கள். இந்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மிகச் சமீபத்திய கணக்கெடுப்பின் படி, காடுகளில் புலிகளின் எண்ணிக்கை வெறும் 1,411 (1165-1657 வரை புள்ளிவிவரப் பிழையை அனுமதிக்கின்றது) என்று தேராயமாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். இது கடந்த பத்தாண்டுகளில் 60% குறைந்துள்ளது. 1972 ஆம் ஆண்டு முதல் வங்கப்புலிகளைப் பாதுகாக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் எனப்படும் அரிய வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டமானது வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களுள் வெற்றிகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது இருப்பினும் ஒரு புலிகள் சரணாலயமானது (சரிஸ்கா புலிகள் சரணாலயம்) அதன் மொத்த புலிகளின் எண்ணிக்கையையும் வேட்டையாடுவதன் காரணமாக இழந்து விட்டது.

இந்திய சீனப் புலி
இந்தியசீனப் புலி (பாந்தெரா டைகிரிஸ் கார்பெட்டி ), கார்பெட்டின் புலி என்றும் அழைக்கப்படுகிறது. இவை கம்போடியா, சீனா, லாவோஸ், பர்மா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகியவற்றில் வாழ்கின்றன. இந்தப் புலிகள் வங்கப்புலிகளை விடச் சிறியதாகவும் கருப்பாகவும் இருக்கின்றன: இவற்றில் ஆண்புலிகளின் எடை 150 முதல் 190 கி.கி (330–420 பவுண்ட்) ஆக உள்ளது. பெண் புலிகளின் எடை இவற்றை விடக் குறைவாக 110-140 கி.கி (242–308 பவுண்ட்) ஆக இருக்கும். மலைகள் அல்லது உயரமான பகுதிகளில் உள்ள காடுகளே அவற்றின் விருப்பமான வாழ்விடங்களாகும். இந்தியசீனப் புலிகளின் எண்ணிக்கை சுமார் 1200 முதல் 1800 வரை உள்ளது. இவற்றில் சில நூறுகள் மட்டுமே காடுகளில் மீதமுள்ளன. சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடுதல், முதன்மை இரை இனங்களான மான் மற்றும் காட்டுப்பன்றி போன்றவற்றை சட்டத்திற்குப் புறம்பாக வேட்டையாடுவதால் ஏற்படும் இரைப் பற்றாக்குறை, வாழ்விடத் துண்டாக்கம் மற்றும் இனக்கலப்பு போன்றவற்றால் தற்போது இருக்கும் எண்ணிக்கையைத் தக்கவைத்தல் என்பது மிகவும் கடினம். வியட்னாமில் சீனர்களின் மருந்துக்கடைகளுக்கு இருப்பு வழங்கவதற்காக அவற்றின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி புலிகள் கொல்லப்பட்டுவிட்டன.

மலேயப் புலி
மலேயப் புலிகள் (பாந்தெரா டைகிரிஸ் ஜேக்சோனி), மலாய் தீபகற்பத்தின் தெற்குப்பகுதியில் மட்டுமே காணப்பட்டன. அங்கு 2004 ஆம் ஆண்டு வரை ஒரு கிளையினமாகக் கருதப்படாமல் இருந்தது. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் பயிற்சி நிறுவனத்தின் பகுதியான மரபியல் வேறுபாட்டுக்கான ஆய்வுக்கூடத்திலிருந்து, லியோ எட் ஆல் அவர்களின் ஆய்வு வந்த பிறகு புதிய வகைப்பாடு தோன்றியது. சமீபத்திய கணெக்கெடுப்பானது காடுகளில் 600-800 புலிகள் இருப்பதாகக் காண்பித்தது. இதுவே புலிகளின் எண்ணிக்கையில் வங்கப்புலிகள் மற்றும் இந்தியசீனப் புலிகளுக்கு அடுத்ததாக மலேயப் புலிகளுக்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத்தந்தது. முக்கியப் பகுதிகளில் வாழும் புலிகளின் கிளையினங்களில் மலேயப் புலி தான் மிகவும் சிறியதும் வாழும் கிளையினங்களில் இரண்டாவதும் ஆகும். சராசரியாக எடையளவு, ஆண் புலிகள் 120 கி.கி மற்றும் பெண்புலிகள் 100 கி.கி ஆகும். மலேயப்புலியானது மலேசியாவில் கோட் சின்னங்களிலும் மேபேங்க் போன்ற மலேசிய நிறுவனங்களின் சின்னங்களிலும் தேசிய உருவமாகத் திகழ்கிறது.

சுமத்திராப் புலி
சுமத்திராப் புலி (பாந்தெரா டைகிரிஸ் சமத்ரயி), இது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மட்டுமே காணப்படுகின்றது. மேலும் மிகவும் ஆபத்தானது. வாழும் புலியின் கிளையினங்கள் அனைத்திலும் மிகச்சிறியது, வயதுவந்த ஆண்புலிகளின் எடை 100 - 140 கி.கி (220–308 பவுண்ட்) மற்றும் பெண்புலிகளின் எடை 75–110 கி.கி (154–242 பவுண்ட்). அவற்றின் இந்தச் சிறிய அளவானது அவைகள் வாழும் சுமத்ரா தீவின் கடினமான அடர்ந்த காடுகளுக்கு ஏற்றதாகவும் அதே போல் சிறிய இரைக்கு ஏற்ற வகையிலுமே அமைந்துள்ளது. காட்டில் இவற்றின் எண்ணிக்கை 400க்கும் 500க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. இவை தீவில் உள்ள தேசியப் பூங்காக்களில் அதிகம் காணப்படும். சமீபத்திய மரபணு சோதனையானது அந்த இனம் அழிந்து விடாமல் இருக்கும்பட்சத்தில் அவை ஒரு தனிப்பட்ட இனமாக[specify] உருவாகலாம் என்பதைக் குறிக்கும் குறிப்புகள் உள்ளதாக உணர்த்தியது. இதுவே மற்ற கிளையினங்களை விடச் சுமத்ரா புலிகளைப் பாதுக்காக்க கண்டிப்பாக அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைகள் வரக்காரணமாக அமைந்தது. அதுபோல் வாழ்விடங்களை அழித்தலே தற்போதைய புலிகளின் எண்ணிக்கைக்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது (தேசியப் பூங்காக்களிலும் இது போன்ற செயல்களின் பதிவுகள் தொடர்கின்றன), 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் 66 புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லது மொத்த எண்ணிக்கையில் சுமார் 20% குறைந்துள்ளது.

சைபீரியன் புலி
சைபீரியன் புலி (பாந்தெரா டைகிரிஸ் அல்டைகா), இது அமுர், மஞ்சுரியன், அல்டைக், கொரியன் அல்லது வடக்கு சீனப் புலி என்றும் அறியப்படுகிறது. இது கிழக்கு சைபீரியாவின் தூரத்தில் உள்ள பிரிமோர்ஸ்கை க்ரையின் பகுதியான அமுர்-உஸ்ஸூரி மற்றும் ஹபரோவ்ஸ்க் க்ரை ஆகியவற்றுக்குள் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய கிளையினமாகக் கருதப்பட்டது. தலையுடன் சேர்த்து உடலின் நீளம் 190–230 செ.மீ (ஒரு புலியின் வாலின் நீளம் 60–110 செ.மீ) மற்றும் சராசரி ஆண் புலிகளின் எடை 227 கிலோகிராம்கள் (500 lb), அமுர் புலியானது கெட்டியான அதன் தோலுக்காகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் வெளிர் தங்கநிறத்தாலும் சில பட்டைகளாலும் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணப்படுகிறது. காட்டில் வாழும் பெருத்த சைபீரியன் புலியின் எடை 384 கி.கி எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மஸாக்கின் கூற்றுப்படி இந்த உருவத்தில் பெரிய புலிகளைப் பற்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய குறிப்புகள் எதுவும் உறுதி செய்யவில்லை. இருந்தாலும் பிறந்து ஆறு மாதமான சைபீரியன் புலியானது முழுவதும் வளர்ந்த சிறுத்தைப் புலியைப் போலப் பெரியதாக இருக்கும். கடந்த இரண்டு கணக்கெடுப்பின்படி (1996 மற்றும் 2005), 450-500 அமுர் புலிகள் தனியாக மற்றும் ஏறக்குறைய தொடர்ச்சியாகவும் பரவிக் காணப்படுகின்றன. இது உலகின் பிரிக்கப்படாத புலிகளின் இனத்தில் ஒன்றாக உள்ளது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற மரபணு ஆராய்ச்சியில் சைபீரியன் புலிகளும் மேற்கு "காஸ்பியன் புலிகளும்" (இவை கடந்த 1950களில் காடுகளிலிருந்து அழிந்தவிட்ட இரு வேறு கிளையினங்களாகக் கருதப்பட்டன) இயல்பாக ஒரே கிளையினத்தைச் சேர்ந்தவை. இங்கு கடந்த நூற்றாண்டில் மனிதனின் கண்டுபிடிப்புகளினால் இந்த இரண்டு எண்ணிக்கைகளுக்குமான வேறுபாடானது மிகச் சமீபத்தில் ஏற்பட்டிருக்கலாம்.

தென்சீனப் புலி
தென்சீனப் புலி (பாந்தெரா டைகிரிஸ் அமோயேன்சிஸ்), அமோய் அல்லது ஜியாமென் புலி என்றும் அறியப்படுகிறது. இது புலியின் கிளையினங்களில் மிகவும் அதிக ஆபத்தானது மற்றும் உலகின் அதிக ஆபத்தான 10 விலங்குகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது புலியின் கிளையினங்களில் சிறியவற்றுள் ஒன்று தென்சீனப் புலிகளில் ஆண் மற்றும் பெண் புலிகளின் நீள வரம்பு 2.2–2.6 m (87–102 in) இவற்றுக்கிடையே உள்ளது. ஆண் புலிகளின் எடை 127 கி.கி. மற்றும் 177 கி.கி. (280–390 பவுண்ட்) இடையேயும் பெண் புலிகளின் எடை 100 கி.கி. மற்றும் 118 கி.கி. (220–260 பவுண்ட்) இடையேயும் இருக்கும். 1983 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் தென்சீனப் புலிகள் எதுவும் காணப்படவில்லை. 
1977 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம், காடுகளில் உள்ள புலிகளைக் கொல்லுவதைத் தடைசெய்ய ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால் இச்சட்டம் கிளையினத்தைக் காப்பதற்கு மிகவும் தாமதமாகப் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அது ஏற்கனவே காடுகளிலிருந்து அழிந்துவிட்டது. சீனாவில் தற்போது 59 தென்சீனப் புலிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் இவை ஆறு விலங்குகளிலிருந்து உருவானவை மட்டுமே என அறியப்படுகின்றன. ஆகவே கிளையினத்தைத் தக்கவைப்பதற்குத் தேவையான மரபியல் வேறுபாடு இப்போது இல்லாமல் போய்விட்டிருக்கலாம். தற்போது இந்தப் புலிகளைக் காடுகளில் மறுபடியும் உருவாக்க அங்கு இனப்பெருக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

அழிந்துவிட்ட கிளையினங்கள்
பாலினேசி புலி (பாந்தெரா டைகிரிஸ் பாலிகா), பாலி தீவு எல்லைக்குள் மட்டுமே இருந்தது. அவை அனைத்து புலி கிளையினங்களிலேயே மிகவும் சிறியதாக இருந்தன. அத்துடன் ஆண்புலிகளின் எடை 90-100 கி.கி. ஆகவும் பெண் புலிகளின் எடை 65-80 கி.கி. ஆகவும் இருந்தன. இந்தப் புலிகள் வேட்டையாலேயே அழிந்துபோயின-கடைசி பாலினேசி புலியானது 27 செப்டம்பர் 1937 அன்று மேற்கு பாலியில் உள்ள சும்பர் கிமா என்ற இடத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது வயதுவந்த பெண் புலியாகும். எந்தப் பாலினேசிப் புலியும் காப்பகப்படுத்தப்படவில்லை. இந்தப் புலியானது பாலினேசி இந்து சமயத்தில் இன்றும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

ஜாவாப்புலி
ஜாவாப் புலி (பாந்தெரா டைகிரிஸ் சண்டைகா), இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்குள் மட்டுமே இருந்தது. தற்போது இந்தக் கிளையினமானது வேட்டையாடுதல் மற்றும் காடுகள் அழிப்புகளின் விளைவாக 1980களிலே அழிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் இந்தக் கிளையினத்தின் அழிவு 1950கள் முதல் நிகழத் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்பட்டது (அப்பொழுது காடுகளில் 25க்கும் குறைவானவை மீதம் இருந்ததாகக் கணிக்கப்பட்டு இருக்கிறது). கடைசியாக 1979 ஆம் ஆண்டில் அவற்றின் மாதிரியைப் பார்த்ததாக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் 1990களில் உருவகங்கள் இருந்ததாகச் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆண் புலிகள் 100-141 கி.கி எடையுடனும் பெண் புலிகள் 75-115 கி.கி எடையுடனும் இருந்தன. ஜாவாப் புலிகள் மிகச்சிறிய புலி கிளையினங்களில் ஒன்றாக இருந்தது. இவை அளவில் தோராயமாகச் சுமத்திராப் புலிகளைப் போன்றே இருந்தன.

கலப்பினங்கள்
புலிகள் உட்பட பெரிய பூனைகளிடையே கலப்பினமாக்கலின் கருத்து, 19ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது. அப்பொழுது குறிப்பாக விலங்கியல் பூங்காக்கள், விநோதமாகக் காண்பித்து வியாபாரப் பெருக்கத்திற்காகக் கலப்பினமாக்கலில் நாட்டம் செலுத்தின. லிகர்கள் மற்றும் டைகான்கள் எனப்படும் கலப்பினங்களை உருவாக்கச் சிங்கங்களைப் புலிகளுடன் (அதிகமாக அமுர் மற்றும் வங்கப்புலி கிளையினங்கள்) இனப்பெருக்கம் செய்ததாக அறியப்பட்டது. இப்படிப்பட்ட கிளையினங்கள் விலங்கியல் பூங்காக்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யப்பட்டன. ஆனால் இனங்கள் மற்றும் கிளையினங்களைக் காக்க வேண்டும் என்பது வலுப்பெற்றதால் கலப்பினமாக்கல் இப்பொழுது ஊக்கம் இழந்துள்ளது. கலப்பினங்கள், சீனாவில் உள்ள தனியார் அருங்காட்சியகங்களிலும் விலங்கியல் பூங்காக்களிலும் இன்னமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.

லிகர் என்பது ஆண் சிங்கம் மற்றும் பெண் புலி இடையே இனப்பெருக்கம் செய்யப்பட்ட கலப்பினமாகும். ஏனெனில் தந்தை சிங்கம் ஒரு வளர்ச்சியை மேம்படுத்தும் மரபணுவைச் செலுத்துகிறது. ஆனால் அதேபோன்று பெண் புலியிடமிருந்து வரும் வளர்ச்சியைத் தடுக்கும் மரபணு வராததால் லிகர்கள் தனது பெற்றோரில் ஒன்றை விட அதிக வளர்ச்சியடைகின்றன. அவை தனது பெற்றோர் இனங்கள் இரண்டின் உடல் மற்றும் நடத்தைகளையும் பகிர்ந்துள்ளன (சந்தன வண்ணப் பின்புலத்தில் புள்ளிகள் மற்றும் பட்டைகள்). ஆண் லிகர்கள் மலட்டுத்தன்மையுடையன, ஆனால் பெண் லிகர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்திறன் கொண்டுள்ளன. ஆண் லிகர்களுக்கு பிடரி மயிர் கொண்டிருப்பதற்கு 50% வாய்ப்புள்ளது. இருப்பினும் அவற்றின் பிடரி மயிரானது அசல் சிங்கத்தினது அளவில் பாதியளவே இருக்கும். லிகர்கள் பொதுவாக 10 முதல் 12 அடி வரை நீளத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் எடை 800 முதல் 1000 பவுண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.

அரிதான டைகான் என்பது பெண் சிங்கம் மற்றும் ஆண் புலி ஆகியவற்றின் கலப்பினமாகும்.

நிற வேறுபாடுகள்
வெள்ளைப் புலிகள்

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் ஒரு வெள்ளைப் புலிகள் இணை

வெள்ளைப் புலிகள், சிங்கப்பூர்
வெள்ளைப் புலி நன்கு அறிந்த மரபணு சடுதி மாற்றத்தால் உருவாக்கப்பட்டது. தொழிநுட்பப்படி அது சின்சில்லா அல்பினிஸ்டிக் என்று அறியப்படுகிறது. இது காடுகளில் அரிதாக இருந்தாலும் அதன் பிரபலத்துக்காக விலங்கியல் பூங்காக்களில் அதிகம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வெள்ளைப் புலிகளின் இனப்பெருக்கம் பல சமயங்களில் உள்ளினப் பெருக்கத்திற்கு (தனித்தன்மை பின்னடைவதால்) வழிநடத்தும். கிளையினங்களை இனக்கலப்பு செய்யும் செயலில் பெரும்பாலும் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க, வெள்ளை மற்றும் ஆரஞ்சுப் புலிகளின் புணர்ச்சியில் நிறைய புது முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற உள்ளினக்கலப்பு, வெள்ளைப் புலிகள் பிறக்கும்போதே வெட்டப்பட்ட மேல்தாடை மற்றும் பக்கவளைவு (வளைந்த முதுகுத்தண்டு) போன்ற உடல் ஊனத்துடன் இருப்பதற்கு வழிவகுக்கிறது. மேலும், வெள்ளைப் புலிகள் மாறு கண்களைக் (இதுவே மாறுகண் எனப்படுகிறது) கொண்டிருக்க வாய்ப்புள்ளது. திடகாத்திரமானதாகத் தோன்றும் வெள்ளைப் புலிகளும் கூடப் பொதுவாக அவற்றின் ஆரஞ்சு புலிகளைப் போல நீண்டநாள் வாழாது. வெள்ளைப் புலிகள் குறித்தப் பதிவுகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் முதலில் நடைபெற்றன. அதன் பெற்றோர் புலிகள் இரண்டும் வெள்ளைப் புலிகளின் அரிதான மரபணுவைப் பெற்றிருந்தால் மட்டுமே அவை நிகழ்கின்றன. இந்த மரபணுவானது ஒவ்வொரு 10,000 பிறப்புகளில் ஒன்றிற்கு மட்டுமே நிகழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளைப் புலி என்பது ஒரு தனிப்பட்ட கிளையினம் அல்ல. அது ஒரு நிற மாறுபாடே ஆகும்; காட்டில் காணப்பட்ட ஒரே வெள்ளைப் புலி இனம் வங்கப்புலிகள் மட்டுமே (காப்பகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வெள்ளைப் புலிகளுமே குறைந்தபட்சம் வங்கப்புலி வகையைச் சேர்ந்தவையே ஆகும்), வெள்ளை நிறத்திற்குக் காரணமாக்க இருக்கும் ஒடுங்கிய பண்பு கொண்ட மரபணு வங்கப்புலிகளின் மூலமே வருகிறது என்று பொதுவாகக் கருதப்பட்டது. இருப்பினும் இதற்கான காரணங்கள் அறியப்படவில்லை. பொதுவாக புலிகளை விட இவை மிகவும் ஆபத்தானவை என்ற பொதுவான ஒரு தவறான கருத்தும் உள்ளது. வெள்ளைப் புலியின் பட்டைகளில் நிறமி இருப்பது தெளிவாக வெளிப்படை எனினும் வெள்ளைப் புலிகள் வெளிரியவை என்பது மற்றொரு தவறான கருத்து. அவை அவற்றின் வெள்ளைச் சாயலில் மட்டுமே மாறுபடவில்லை. அவை ஊதாக் கண்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற மூக்குகளையும் பெற்றுள்ளன.

தங்கநிறப் பட்டைப் புலிகள்

பஃப்பலோ விலங்கியல் பூங்காவில் அரிதான தங்கநிறப்பட்டை/ஸ்டாபெர்ரி புலி.
கூடுதலாக மற்றொரு ஒடுங்கிய பண்பு மரபணுவானது, மிகவும் வழக்கத்திற்கு மாறான "தங்கநிறப் பட்டை" நிற வேறுபாட்டை உருவாக்கலாம், சிலநேரங்களில் அது "ஸ்ட்ராபெர்ரி" எனவும் அறியப்படுகிறது. தங்கநிறப் பட்டைப் புலிகளானது வெளிர் தங்கநிற மென்மயிர், வெளிரிய கால்கள் மற்றும் மங்கிய ஆரஞ்சுநிறப் பட்டைகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மென்மயிரானது பெரும்பாலும் இயல்பைவிட சற்று கடினமானதாக இருக்கும்.[51] தங்கநிறப் பட்டைப் புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 30. இதில் மிகக் குறைவானவையே காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளைப் புலிகளைப் போன்றே ஸ்ட்ராபெர்ரி புலிகளும் வங்கப்புலிகளின் வகையைச் சேர்ந்தவையே ஆகும். பல மரபுக்கலப்புப் புலிகள் என்று அழைக்கப்படுகின்ற சில தங்கநிறப் பட்டைப் புலிகள் வெள்ளைப் புலியின் மரபணுவைக் கொண்டுள்ளன. இத்தகைய இரண்டு புலிகளைக் கலப்பினம் செய்யும்போது சில பட்டையில்லாத வெள்ளைச் சந்ததியை உருவாக்கலாம். வெள்ளை மற்றும் தங்கநிறப் பட்டைப் புலிகள் இரண்டுமே பெரும்பாலும் சராசரி வங்கப்புலிகளை விடப் பெரியதாக இருக்கின்றன.

பிற நிற வேறுபாடுகள்
"ஊதா" அல்லது பலகைக் கல்நிறப் புலி, மால்டீஸ் புலி மற்றும் அதிகபட்ச அல்லது முழுமையான கருப்புப் புலிகள் ஆகியவையும் உள்ளதாகச் சில உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் கூறுகின்றன, இவை ஊகங்களாகவே உள்ளன. உண்மையாக இருந்தால் தனிப்பட்ட இனங்களாக இல்லாமல் இடைவெளியிட்ட மரபணு சடுதி மாற்றமாகவே இருக்கும்.

உயிரியல் மற்றும் நடத்தை
இடம் சார்ந்த நடத்தை
புலிகள் தனியாக வாழ்வன, அவை இடம்சார்ந்த விலங்குகள் ஆகும். புலியின் வாழ்விட அளவு வரம்பானது முதன்மையாக இரை கிடைக்கக்கூடிய தமையைச் சார்ந்தது. மேலும் ஆண் புலிகள் பெண் புலிகளை அடைவதற்கான வாய்ப்பையும் பொருத்தது. ஒரு பெண் புலியானது அதன் இருப்பிடமாக 20 சதுர கிலோமீட்டர்கள் பரப்புள்ள இடத்தைக் கொண்டிருக்கும். இருப்பினும் ஆண் புலிகளின் இருப்பிடம் சற்று அதிகம். அவை 60–100 கி.மீ2 இடத்தில் வசிக்கின்றன. ஆண் புலிகளின் எல்லை வரம்பில் சில பெண்புலிகளின் எல்லைகளும் அடங்குகின்றன.


பெரும்பாலான புலிகள் தனியாக வாழ்பவை.
தனிப்பட்ட புலிகள் ஒவ்வொன்றுக்கும் இடையேயான தொடர்புகள் மிகச் சிக்கலானது, இடம்சார்ந்த உரிமைகள் மற்றும் எல்லை மீறல்கள் தொடர்பாகப் புலிகள் பின்பற்றுவதற்கான எந்த "விதிகளும்" அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாகப் பெருவாரியான புலிகள் ஒன்றை ஒன்று சந்திப்பதைத் தவிர்க்கின்றன. இருப்பினும் ஆண் மற்றும் பெண் புலிகள் இரையை ஒன்றாகப் பகிர்ந்து கொள்வதற்கான சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு ஆண் புலியானது தான் கொன்ற இரையை இரண்டு பெண் புலிகள் மற்றும் நான்கு குட்டிகளுடன் பகிர்வதை ஜார்ஜ் ஸ்கால்லெர் பார்த்துள்ளார். பெண் புலிகள் பெரும்பாலும் ஆண்புலிகள் அதன் குட்டிகளின் அருகில் இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் ஸ்கால்லெர் இந்தப் பெண்புலிகள் தனது குட்டிகளை ஆண் புலிகளிடமிருந்து காப்பதற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பதைக் கண்டு அது குட்டிகளுக்குத் தந்தையாக இருக்கலாம் எனக் கருதுகிறார். ஆண் சிங்கங்ளைப் போலல்லாமல் ஆண் புலிகள், பெண் புலிகளும் குட்டிகளும் தான் கொன்றுவந்த இரையை முதலில் உண்ண அனுமதிக்கின்றன. மேலும் புலிகள் கொன்ற இரையைப் பகிரும்போது நெருக்கமாகவும் இணக்கமாகவும் நடந்து கொள்வதைக் காணமுடிகிறது. மாறாகச் சிங்கங்கள் அந்த நேரத்தில் சின்னத்தனமான சண்டையிட்டுக் கொண்டும் இருக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத புலிகளும் தங்கள் இரையை பகிர்ந்துகொள்வதும் காணப்பட்டுள்ளது. ஸ்டீபன் மில்ஸின் புலி என்ற புத்தகத்தில் ஒரு நிகழ்வை ரத்தம்பூரில் வால்மிக் தப்பரும் ஃப்த்தே சிங் ரத்தோரும் பார்த்த நிகழ்ச்சியைப் பற்றிப் பின்வரும் மேற்கோளில் விளக்குகிறார்

பத்மினி என்று அழைக்கப்படும் ஒரு ஆதிக்கமிக்கப் பெண் புலியானது 250 கி.கி (550-பவுண்ட்) உடைய ஒரு ஆண் நீலான் மானைக் கொன்றது - நீல்கை என்பது மிகப்பெரிய மானினம் ஆகும். அவர்கள் விடிந்தபிறகு அந்த மானைக் கொன்ற இடத்தில் அந்தப் பெண் புலியையும் அதன் மூன்று 14 மாதக் குட்டிகளையும் கண்டனர். மேலும் அந்தக் குட்டிகள் எந்தவித இடையூறுமின்றி அவை இருந்ததைப் பார்த்தனர். அந்த நேரத்தில் அந்தக் குடும்பத்தில் 2 வயது வந்த பெண்புலிகளும் ஒரு வயது வந்த ஆண் புலியும் சேர்ந்துகொண்டன - அவை பத்மினியின் முந்தைய ஈற்று வாரிசுகளாகும் மேலும் இரண்டு தொடர்பில்லாத புலிகளும் சேர்ந்து கொண்டன. அவற்றில் ஒன்று பெண் புலி மற்றொன்று அடையாளம் காணப்படவில்லை. மூன்று மணியளவில் அந்தக் கொல்லப்பட்ட இரையைச் சுற்றி ஒன்பது புலிகளுக்குக் குறையாமல் இருந்தன.

இளம் பெண் புலிகள் தனது இருப்பிடத்தை முதலில் அமைக்கும்போது அவை தமது தாயின் இருப்பிடப்பகுதிக்கு மிக அருகிலேயே அமைக்கின்றன. பெண்புலி மற்றும் அதன் தாய்ப்புலி ஆகியவற்றின் பிரதேசத்தின் பொதுவான பகுதியானது காலப்போக்கில் குறைகிறது. இருப்பினும் ஆண் புலிகள் அவற்றின் உறவான பெண் புலிகளைவிட அதிக இடத்தை அமைத்துக்கொள்கின்றன. மேலும் அவை இளம் வயதிலேயே தனியான இடத்தை அமைத்துக்கொள்ளுமாறு வெளியேற்றப்படுகின்றன. ஒரு இளம் ஆண் புலியானது மற்ற ஆண் புலிகளின் எல்லைக்குள் அடங்காத பகுதியைப் பார்த்து ஆக்கிரமிக்கும் அல்லது மற்ற ஆணின் பிரதேசத்தில் பிற ஆணிற்கு போட்டியாக மாறத் தேவையான வலிமை மற்றும் வயது வரும்வரை தற்காலிகமாக வாழும். தமது சொந்தப் பகுதிகளை விட்டு வெளியேறித் தனிப்பட்ட பிரதேசங்களை அமைப்பதற்காக வெளியேறிய இளம் புலிகளில்தான், வயதுவந்த புலிகளின் அதிகபட்ச இறப்பு வீதம் (ஆண்டுக்கு 30-35%) பதிவாகியுள்ளது.

பிற பகுதியைச் சேர்ந்த பெண் புலிகள் தங்கள் பகுதிக்குள் வருவதைப் பெண் புலிகள் சகித்துக்கொள்ளும் அளவுக்கு ஆண் புலிகள் சகித்துக்கொள்வதில்லை. இருந்தாலும் பெரும்பான்மையான பிரதேச சிக்கல்கள், நேரடியான தாக்குதல் மூலமாக இல்லாமல் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதன் மூலமே வழக்கமாகத் தீர்க்கப்படுகின்றன. பலம் குறைவான புலிகள் புரண்டு விழுந்து முதுகு தரையில் படிய விழுந்து தோற்ற பல காட்சிகள் காணப்பட்டுள்ளன. பலசாலியான புலியானது ஒருமுறை தனது பலத்தை நிலைநாட்டிவிட்டால் அந்த ஆண் புலியானது தோல்வியடைந்த புலியைத் தன் பகுதிக்குள் வசிக்க அனுமதிக்கிறது. ஆனாலும் மிக நெருக்கமாக வராதவரை மட்டுமே அவை அனுமதிக்கப்படுகின்றன. ஒரு பெண் புலி காமவேட்கையில் இருக்கும்போது மட்டுமே இரண்டு ஆண் புலிகளுக்கு இடையே மிகவும் ஆபத்தான சண்டை நிகழும். அதன் விளைவாக ஏதேனும் ஒரு ஆண் புலி இறக்கலாம். இருந்தபோதிலும் இயல்பாக இது போன்ற நிகழ்வு அரிதுதான்.

தனது பிரதேசங்களை அடையாளம் காண ஆண் புலிகள் மரங்களில் சிறுநீர் மற்றும் மலவாய்ச் சுரப்பிகளில் தோன்றும் சுரப்புநீர் ஆகியவற்றை தெளித்து அதனைக் குறியிடுகின்றன. அதேபோல் கழிவுகளைப் பரப்பித் தடம்பதிப்பதன் மூலமும் குறியிடுகின்றன. ஆண்புலிகள், பெண்புலிகளின் இனப்பெருக்கத்திற்கான நிலமையை அவற்றின் சிறுநீர் குறியீடுகளை முகர்ந்து பார்ப்பதன் மூலமாக அறிந்து உந்தலுணர்வை முகச்சுளிப்பைக் கொண்டு காட்டுகின்றன, இது ஃப்ளெமென் பதில் என்று அழைக்கப்படும்.

வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி புலிகள் காட்டில் ஆராயப்பட்டிருக்கின்றன. புலிகளின் எண்ணிக்கை கடந்தகாலங்களில் அவற்றின் கால்தடங்களின் ப்ளாஸ்டர் அச்சுத்தடங்களைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன. இந்த முறை தவறானது எனக் கண்டறியப்பட்டது அதற்குப் பதிலாகக் கேமராப் பதிவைப் பயன்படுத்த முயற்சிக்கப்பட்டது. அவற்றின் கழிவுகளிலிருக்கும் DNA அடிப்படையில் மதிப்பிடும் புதிய உத்திகளும் உருவாகி வருகின்றன. காடுகளில் ஆராய்ந்து அவற்றைத் தடமறிதலுக்கு ரேடியோ கழுத்துப்பட்டைகளும் பிரபலமான அணுகுமுறையாக இருந்திருக்கிறது.

வேட்டையாடுதலும் உணவும்[தொகு]

புலியின் பல்லமைப்பு. பெரிய கோரைப்பற்கள் இரையைக் கடித்துக் கொல்லப் பயன்படுகின்றன. ஆனால் அவை உண்ணும் போது கோரைபற்களை கறியைக் கிழிக்கப் பயன்படுத்துகின்றன.
காடுகளில் புலிகள் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான விலங்குகளை அதிகம் உண்கின்றன. சாம்பார் மான், காட்டெருமை, சீதல் மான், காட்டுப்பன்றி, நீலான் மான், நீர் எருமை மற்றும் எருமை ஆகியவையே இந்தியாவில் புலிகளின் பிடித்தமான இரையாகும். சிலநேரங்களில் இவை சிறுத்தைகள், மலைப்பாம்புகள், ஸ்லோத் கரடிகள் மற்றும் முதலைகள் ஆகியவற்றையும் உண்கின்றன. சைபீரியாவில் இவற்றின் முக்கிய இரையினங்கள் மஞ்சூரியன் வாப்பிடி மான், காட்டுப்பன்றி, சைகா மான், கடமான், ரோய் மான் மற்றும் கஸ்தூரி மான் ஆகியவையாகும். சுமத்ராவில் சாம்பார் மான், முண்ட்ஜக் மான், காட்டுப்பன்றி மற்றும் மலேசியப் பன்றி ஆகியவை இவற்றின் இரையினங்களாகும். காஸ்பியன் புலியின் முன்னாள் வரம்பில் சைகா ஆண்ட்டிலோப் மான், ஒட்டகங்கள், கௌகசியன் காட்டெருமை, யாக் மாடு மற்றும் காட்டுக்குதிரை ஆகியவை இரையினங்களாக இருந்தன. நிறைய ஊனுண்ணிகளைப் போலவே இவையும் சந்தர்ப்பவாதிகள் ஆகும். அவை குரங்குகள், மயில்கள், குழி முயல்கள் மற்றும் மீன் போன்ற மிகச்சிறிய இரைகளையே உண்ணுகின்றன.

வயதுவந்த யானைகளைப் பொது இரையாக உண்பது மிகவும் கடினம். ஆனால் புலிகள் மற்றும் யானைகளுக்கு இடையே ஏற்படும் சண்டையிடும் சில நேரங்களில் யானை இரையாவதும் உண்டு. ஒரு சமயம் ஒரு புலியானது ஒரு வயதுவந்த இந்தியக் காண்டாமிருகத்தை கொன்றதாக அறியப்பட்டுள்ளது. இளம் யானை மற்றும் காண்டாமிருகக் குட்டிகளையும் எப்போதாவது இரையாகக் கொள்ளப்படுகின்றன. புலிகள் சில நேரங்களில் நாய்கள், பசுக்கள், குதிரைகள் மற்றும் கழுதைகள் போன்ற வீட்டு விலங்குகளையும் இரையாக்கிக்கொள்கின்றன. இவை விளையாட்டுக் கொல்லிகள் என அழைக்கப்படாமல் கால்நடைத் திருடர்கள் அல்லது கால்நடைக் கொல்லிகள் எனப்படுகின்றன.

வயதான புலிகள் அல்லது காயம்பட்ட புலிகள் அவற்றின் இயற்கையான இரையை பிடிக்க முடியாத போது மனித உண்ணிகளாக மாறியுள்ளன; இந்த நிகழ்வு இந்தியாவில் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. சுந்தரவனக் காடுகளைச் சேர்ந்தவை இதற்கு விதிவிலக்காகும். இங்கு திடகாத்திரமான புலிகள், காட்டுப் பொருட்களைத் தேடிவரும் மீனவர்கள் மற்றும் கிராமவாசிகளைக் கொன்று உண்கின்றன. இதன் அர்த்தம் மனிதர்கள் புலியின் உணவில் சிறிய பங்கே என்பதாகும். புலிகள் சிலசமயங்களில் நார்ச்சத்து உணவுக்காகத் தாவரங்களை உண்ணும், ஸ்லோ மேட்ச் மரத்தின் பழம் அதற்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது.


புலிகளின் அதிக வலிமையான தாடைகளும் கூரிய பற்களும் அவற்றைச் சிறந்த வேட்டையினமாக உருவாக்குகின்றன.
புலிகள் வழக்கமாக இரவில்தான் வேட்டையாடும். பொதுவாக அவை தனியாகவே வேட்டையாடும். பெரும்பாலான பூனை இனங்களைப் போலவே பதுங்கியிருந்து எந்தக் கோணத்திலிருந்தும் பாய்ந்து தனது உடலின் அதிகமான திறனைச் செலுத்தி தனது உடல் அளவையும் வலிமையையும் பயன்படுத்தி பெரிய இரையையும் நிலைகுலையச் செய்யும். அதிக எடையைக் கொண்டிருந்தாலும் புலிகள் 49-65 கிலோமீட்டர்கள்/மணி (35-40 மைல்கள்/மணி) என்ற வேகத்தில் செல்லக்கூடியவை. இருப்பினும் புலிகளின் திண்மைக் குறைவு என்பதால் மிகக் குறுகிய தொலைவு மட்டுமே இவை இவ்வேகத்தில் செல்ல முடியும். இதனால் புலிகள் இரையைத் தாக்கத் தொடங்கும் முன்பு இரைக்கு மிகநெருக்கமாக இருக்க வேண்டியது அவசியம். புலிகள் சிறப்பாகத் தாவும் திறனைப் பெற்றுள்ளன; அது கிடைமட்டமாக 10 மீட்டர்கள் தாவியுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கமாக இதில் பாதியளவிலேயே தாவல்கள் இருக்கின்றன. இருப்பினும் இருபது வேட்டைகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிகரமாக இரையைக் கொள்ள முடிகிறது.

பெரிய இரையை வேட்டையாடும்போது புலிகள் பெரும்பாலும் முதலில் அவற்றின் தொண்டையைக் கடிக்கின்றன. முன்னங்கால்களைப் பயன்படுத்தி இரையைப் பிடித்துத் தரையில் இழுத்துத் தள்ளுகின்றன. புலியானது இரையின் மீது கிடுக்குப்பிடி போட்டுச் சாகும்வரை இரையின் கழுத்தை நெருக்குகிறது. இந்த முறையில் புலிகள் தம்மைவிட சுமார் ஆறு மடங்கு அதிக எடையுள்ள காட்டெருமை மற்றும் நீர் எருமைகளைக் கொல்கின்றன. சிறிய இரையை புலிகள் அதன் பிடரியைக் கடிக்கின்றன. பெரும்பாலும் தண்டுவடத்தை உடைத்தல், மூச்சுகுழலைக் கடித்தல், அல்லது தொண்டைக் குருதிச் சிரையை அல்லது கரோட்டிட் தமனியைக் கடித்து உடைத்தல்போன்ற முறைகளில் கொல்கிறது. புலிகள் இரையைக் கொல்ல தனது பாதநகங்களால் தாக்குவதும் வீட்டு விலங்குகளின் மண்டையோட்டை நொறுக்கும் அளவுக்குப் போதுமான பலமுள்ளதாக இருக்கிறது. இருப்பினும் இந்தத் தாக்குதல் முறை அரிதானதாகவே அறியப்படுகிறது. மேலும் ஸ்லோத் கரடிகளைத் தாக்கும்போது அவற்றின் முதுகை உடைக்கின்றன.

1980களில் ரந்தம்பூர் தேசியப்பூங்காவில் "கெங்ஹிஸ்" என்று பெயரிடப்பட்ட ஒரு புலியானது தனது இரையை அடிக்கடி ஆழமான ஏரி நீரில் வேட்டையாடுகின்றது என அறியப்பட்டது. இந்த 200 ஆண்டுகளுக்கும் மேலான கண்காணிப்புகளில் இதற்கு முன்னர் இந்த மாதிரியான தாக்குதல் குணமானது அறியபட்டிருக்கவில்லை. மேலும் இந்தப் புலி மிகச்சிறந்த வெற்றியாளராகத் தோன்றியது. அதிகபட்சம் அதன் வேட்டைகளில் 20% இரையைக் கொல்வதில் முடிந்துள்ளது.

இனப்பெருக்கம்

புலிகளின் புணர்ச்சி ஆண்டு முழுவதும் நிகழலாம். ஆனால் பொதுவாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை அதிகம் நடைபெறுகிறது. ஒரு பெண் புலி சில நாட்களுக்கு மட்டுமே இனப்பெருக்கத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கிறது. அந்தக் கால இடைவெளியில் புணர்ச்சி அடிக்கடி நடைபெறுகிறது. ஒரு இணைப் புலிகள் பொதுவாகப் பிற பூனையினங்களைப் போலவே சத்தத்துடன் அடிக்கடி புணர்கின்றன. கருவளர் காலம் 16 வாரங்களாகும். ஒவ்வொரு ஈற்றுக்கும் வழக்கமாக 3-4 குட்டிகள், ஒவ்வொன்றும் 1 கிலோகிராம் (2.2 lb) எடையில் பிறக்கின்றன. அவை பிறப்பிலேயே குருடாகவும் தனியே விட்டப்பட்டவையாகவும் இருக்கின்றன. பெண்புலிகள் அவற்றைத் தனியாக வளர்க்கின்றன, அவற்றைத் தோப்புக்கள் மற்றும் பாறைப் பிளவுகள் போன்ற மறைவிடங்களில் பாதுகாக்கின்றன. குட்டிகளின் தந்தைப் புலியானது பொதுவாக அவைகளை வளர்ப்பதில் பங்கெடுப்பதில்லை. பெண் புலிகளானது முந்தைய ஈற்றுக் குட்டிகளை இழந்துவிட்டால் 5 மாதங்களில் அடுத்த ஈற்றுக்குத் தயாராகிவிடுகின்றன என்பதால் பெண்புலியை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதாக்குவதற்காகச் சுற்றித்திரியும் தொடர்பில்லாத ஆண் புலிகள் கூடப் புலிக்குட்டிகளைக் கொன்றுவிடலாம். புலிக்குட்டிகளின் இறப்பு வீதம் மிகவும் அதிகம் - சராசரியாகக் குட்டிகளில் பாதி இரண்டு வயதுக்கு மேல் பிழைத்து இருப்பதில்லை.

பொதுவாக ஒவ்வொரு ஈற்றிலும் ஒரு மேலாங்கிய குட்டி இருக்கிறது. பொதுவாக அது ஆணாக இருக்கும் ஆனால் அது வேறு பாலினமாகவும் இருக்கலாம். இந்தக் குட்டியானது பொதுவாகச் சகோதரர்களுடன் விளையாடும்போது ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் அதிக சுறுசுறுப்புடன் இருக்கும். அது வழக்கத்தை விட வெகு குறுகிய காலத்திலேயே தாயை விட்டு விலகிச்செல்கிறது. 8 வாரங்களில் குட்டிகள் மறைவிடத்தைவிட்டு வெளியே வந்து தம் தாயைப் பின்தொடரத் தயாராகின்றன. இருப்பினும் அவை வயதாகும் வரை தாய்ப்புலி தனது பிரதேசத்தில் சுற்றித்திரியுமளவுக்கு அவை தாயுடன் பயணிப்பதில்லை. குட்டிகள் அவற்றின் வயது 18 மாதங்களை நெருங்கும்போது தாயைச் சாராதவையாகின்றன. ஆனாலும் அவை 2–2½ ஆண்டுகள் வயதாகும் வரை தங்கள் தாயைவிட்டுப் பிரிவதில்லை. பெண்புலிகள் பாலின முதிர்ச்சியை 3-4 ஆண்டுகளில் அடைகின்றன. ஆண்புலிகள் 4-5 ஆண்டுகளில் பாலின முதிர்ச்சியை அடைகின்றன.

ஒரு பெண்புலி தனது வாழ்நாளில் சராசரியாகச் சம எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் குட்டிகளைப் பிரசவிக்கும். காப்பகப்படுத்தப்பட்ட நிலையில் புலிகளின் இனப்பெருக்கம் நன்றாக உள்ளது. மேலும் அமெரிக்காவில் காப்பகப்படுத்தப்பட்ட புலிகளின் எண்ணிக்கையானது உலக காடுகளில் உள்ள எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கலாம்.

இனங்களுக்கிடையே வேட்டையாடும் தொடர்புகள்

1807 இலண்டனில் வெளியிடப்பட்ட சாமுவேல் ஹாவெட் & எட்வர்டு ஓரம் தங்கள் கைகாளல் வரைந்த தண்ணீர் கலரில் செதுக்கிய சித்திரங்களானது காட்டு நாய்கள் புலியை வேட்டையாடுவதை விளக்குகின்றது.

நியூ ஜெர்ஸி யின் ஜாக்ஷன் டவுன்ஷிப்பில் உள்ள சிக்ஸ் ஃப்ளாக்ஸ் கிரேட் அட்வெஞ்சர் தீம்பார்க்கில் நீந்துகின்ற ஒரு புலி.
புலிகள், சிறுத்தைப்புலிகள், மலைப்பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற பயங்கர மிருகங்களைக் கூடச் சிலநேரங்களில் கொல்லலாம். இருப்பினும் வேட்டையினங்கள் பொதுவாக ஒன்றையொன்று கொல்வதைத் தவிர்க்கின்றன. ஒரு முதலையிடம் அகப்படும் போது புலியானது தன் பாதங்களால் அந்த ஊர்வனத்தின் கண்களைத் தாக்கும். சிறுத்தைப்புலியானது நாளின் வெவ்வேறு நேரங்களில் வேட்டையாடுதல் மற்றும் வேறுபட்ட இரையை வேட்டையாடுதல் மூலமாகப் புலியிடமிருந்து வரும் போட்டியைத் தட்டிக்கழிக்கின்றன. பொதுவாகத் தேவையான அளவு இரையை கொண்டுள்ளதால் புலிகளும் சிறுத்தைப்புலிகளும் போட்டிச் சண்டைகள் மற்றும் சவன்னா என்ற வெப்பப் புல்வெளிகளில் பொதுவாகக் காணப்படும் இனங்களுக்கிடையேயான மேலாதிக்க நிலைகள் போன்ற சிக்கல்களின்றி வெற்றிகரமாக ஒன்றாக வாழ்கின்றன. இரண்டு இனங்கள் சேர்ந்து வாழும் பகுதிகளில் புலிகள் நரி எண்ணிக்கையைக் குறைக்கின்றன என அறியப்படுகிறது. செந்நாய் கூட்டம் உணவுப் பிரச்சினையில் புலிகளைத் தாக்கிக் கொல்வதாக அறியப்படுகிறது. இருப்பினும் வழக்கமாகப் பெரிய இழப்புகள் ஏற்படுகிறது. சைபீரியன் புலிகளும் பழுப்புநிறக் கரடிகளும் போட்டியாளர்களாக இருக்கலாம், வழக்கமாக அவை போட்டியைத் தவிர்க்கின்றன; இருந்தாலும் சிலநேரங்களில் புலிகள் கரடிகளின் குட்டிகளையும் சில வயதுவந்த கரடிகளையும் கொல்கின்றன. கரடிகள் (ஆசிய கருப்புக் கரடிகள் மற்றும் பழுப்புநிறக் கரடிகள்) ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் புலிகளின் உணவில் 5-8% பங்காக உள்ளன.  தற்பாதுகாப்புக்காகவோ அல்லது இரைச் சண்டையின் காரணமாகவோ பழுப்புநிறக் கரடிகள், புலிகளைக் கொன்றதற்கான பதிவுகளும் உள்ளன. சில கரடிகள் குளிர்கால ஒடுக்கத்திலிருந்து எழும்போது புலிகளின் இரையை அபகரிக்க முயற்சிக்கும். இருப்பினும் புலிகள் சிலநேரங்களில் அதன் தாக்குதலைத் தடுத்துநிறுத்தும். ஸ்லோத் கரடிகள் மிக முரட்டுத்தனமானவை, சிலநேரங்களில் இளம் வயது புலிகளை அவற்றின் இரை இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறிகின்றன. இருப்பினும் வங்கப்புலிகளின் உணவு பெரும்பாலும் ஸ்லோத் கரடிகளே.

புலிச்சின்னம்

தொன்றுதொட்டு சோழ அரசர்களின் அடையாளச் சின்னமாக விளங்கியது புலி.

வாழ்விடம்

பொதுவாகப் புலியின் வாழ்விடம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது: எப்போதும் எளிதில் மறைவிடங்களைக் கொண்டிருக்கும். மேலும் அது நீர்நிலைகள் அருகில் உள்ளதும் இரை நிறைந்த பகுதியாகவும் இருக்கும். வங்கப்புலிகள் அஸ்ஸாம் மற்றும் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள மழைக்காடுகள், பசுமைமாறாக் காடுகள், பகுதியளவு-பசுமைமாறாக் காடுகள்; கங்கை டெல்டாவின் சதுப்புநிலக் காடுகள்; நேபாளத்தின் இலையுதிர்க் காடுகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் முட்காடுகள் உட்பட அனைத்து விதமான காடுகளிலும் வாழ்கின்றன. அடர்ந்த தாவரங்கள் நிறைந்த பகுதிகள் புலிகள் மறைந்துகொள்ள ஏற்றதாக இருப்பதால் சிங்கத்துடன் ஒப்பிடும்போது, அவை பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதியைத் தேர்வுசெய்கிறது. மேலும் ஒப்பிடுகையில் மதிப்பும் ஆதிக்கமும் குறைவில்லாமல் தனி வேட்டையாடியாக இருக்கக்கூடிய இடத்தையே விரும்புகின்றன. பெரிய பூனையினங்களில் புலியும் ஜாக்குவார் சிறுத்தையும் மட்டுமே நன்கு நீந்துபவை; புலிகள் பெரும்பாலும் குளங்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளில் அடிக்கடி குளிக்க்கின்றன. மற்ற பூனையினங்கள் போலத் தண்ணீரை ஒதுக்காமல் புலிகள் அவற்றை விரும்பித் தேடிச்செல்லும். சில நாட்களில் அதிக வெப்பமான நேரங்களில் அவை பெரும்பாலும் குளங்களில் குளித்துச் சூட்டைத் தணிக்கின்றன. புலிகள் மிகச்சிறப்பாக நீந்துபவை, அவை 4 மைல்கள் வரை நீந்தக்கூடியவை. புலிகள் பெரும்பாலும் இறந்துபோன அவற்றின் இரையை ஏரிகளில் கொண்டு செல்வதும் பொதுவாகக் காணப்படக்கூடிய ஒரு நிகழ்வு.

பாதுகாப்பு முயற்சிகள்

1990 ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை
காட்டிலுள்ள புலிகளின் எண்ணிக்கையானது தோலுக்காக வேட்டையாடுதல் மற்றும் அதன் இருப்பிடத்தை அழித்தல் ஆகிய செயல்களால் மிகவும் குறைந்துவிட்டது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் 100,000 புலிகளாக மதிப்பிடப்பட்டிருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது காடுகளில் அதன் எண்ணிக்கை 2,000 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. சில மதிப்பீடுகள் இன்னும் குறைவாக, 2,500ஐ விடக் குறைவான முதிர்ந்த இனப்பெருக்கம் செய்யக்கூடிய புலிகளே உள்ளதாகக் கூறுகின்றன. முதிர்ந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியவையின் எண்ணிக்கை 250க்கு அதிகமான புலிகளைக் கொண்டுள்ள துணை எண்ணிக்கை எதுவும் இல்லை என்றும் கூறுகின்றன. சுமார் 20,000 புலிகளைத் தற்சமயம் காப்பகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த அழிவு ஆபத்தானது ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இவ்வாறு காப்பகப்படுத்தப்பட்டவையின் எண்ணிக்கையில் 4-5,000 புலிகள் சீனாவில் உள்ள வியாபார நோக்கம் கொண்ட புலிகள் பண்ணைகளில் உள்ளன. அவை அனைத்தும் குறைந்த மரபணு வேறுபாடு கொண்டவை.

இந்தியா
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா அதிக எண்ணிக்கையிலான வனப்புலிகளைக் கொண்டுள்ள நாடாகவும் உள்ளது. புலிகள் பாதுகாப்புத் திட்டம் என்று அறியப்படும் முக்கிய பாதுகாப்புத் திட்டம் 1973 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தொடங்கப்பட்டு செயலில் உள்ளது. மனித முன்னேற்றம் இல்லாத இடங்களை மீட்டெடுத்து நன்கு கண்காணிக்கப்படும் சுமார் 25 புலிகள் சரணாலயத்தை உருவாக்கியதே இதன் அடிப்படை நடவடிக்கையாகும். இந்தத் திட்டத்தின் விளைவாக 1973 ஆம் ஆண்டில் 1,200 என்று இருந்த வன வங்கப்புலிகளின் எண்ணிக்கை 1990களில் 3,500க்கும் அதிகமாக மாறி மூன்று மடங்காகியது. இருப்பினும் இந்திய அரசாங்கத்தின் அறிக்கைகள் சில சந்தேகங்களுக்குள்ளாயின.[மேற்கோள் தேவை] சமீபத்தில் பிறப்பிக்கபட்ட சிற்றினங்கள் சட்டம், புலிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அந்த சிற்றினங்களை வாழ்வதற்கு அனுமத்தித்தது. இது அத்திட்டம் தொடர்ந்து வெற்றி பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
2007 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பின் அறிக்கை 12 பிப்ரவரி 2008 அன்று வெளியிடப்பட்டது. அது இந்தியாவில் வனப் புலிகளின் எண்ணிக்கை தோராயமாக 1,411 என்று குறைந்துள்ளதாகக் காட்டுகிறது. அந்த அறிக்கையில் புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கு சட்டவிரோதமாக வேட்டையாடுதலே நேரடியான காரணமாகலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரஷ்யா
1940களில் காடுகளில் உள்ள சைபீரியன் புலியானது 40 புலிகள் என்ற அளவில் அழிந்துபோகும் நிலையில் இருந்தது. சோவியத் யூனியன் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட வேட்டையாடுதலுக்கு எதிரான அமைப்புகள் வேட்டையாடுதலைக் கட்டுப்படுத்தின. மேலும் பாதுகாப்பு பகுதிகளின் (ஜபோவெட்னிக்குகள்) குழுக்கள் தொடங்கப்பட்டது. அவை புலிகளின் எண்ணிக்கையைச் சில நூறுகளாக அதிகரிக்க வழிவகுத்தது. 1990களில் ரஷ்யாவின் பொருளாதரம் சீர்குலைந்தபோது வேட்டையாடுதல் மீண்டும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது, உள்ளூர் வேட்டைக்காரர்கள் தடைசெய்யப்பட்ட மிகுந்த வருமானமளித்த சீனச்சந்தையை முற்றுகையிட அணுகினர். அப்பகுதிகளில் மரம்வெட்டுதல் அதிகரித்தது. உள்ளூர் பொருளாதார முன்னேற்றம், பாதுகாப்பு முயற்சிகளில் பெரிய வளங்களை முதலீடு செய்ய வழிவகுத்தது, பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு முன்னேற்ற விகிதத்தையும் காடுகளை அழிப்பதையும் அதிகரிக்கச் செய்தது. இனங்களைக் காப்பதில் உள்ள முக்கியத் தடையாக இருப்பது தனிப்பட்ட புலிகளுக்குத் தேவைப்படும் பரந்த அளவிலான பிரதேசமே (ஒரு பெண் புலிக்குச் சுமார் 450 கி.மீ.2 வரை தேவைப்படுகிறது) ஆகும்.[15] தற்போதுள்ள பாதுகாப்பு முயற்சிகள் உள்ளூர் அரசாங்கங்களாலும் உலகளாவிய நிதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் போன்ற சர்வேதச அமைப்புகளின் ஆதரவில் உள்ள NGOக்களின் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பெரிய பூனையினம் குளம்பு விலங்குகளின் எண்ணிக்கையை ஓநாய்களின் எண்ணிக்கையை விடக்குறைப்பதாலும் ஓநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாலும், கிழக்குப் பகுதி வேட்டையாடுபவர்களைச் சமரசம் செய்வதற்காக ரஷ்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புலிகளைக் கொண்டு ஓநாய்களின் எண்ணிக்கையைக் குறைத்தனர். தற்போது 400-550 விலங்குகள் காடுகளில் உள்ளன.

திபெத்
திபெத்தில் புலி மற்றும் சிறுத்தைப்புலியின் தோல்கள் பல்வேறு விழாக்கள் மற்றும் உடைகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வனவிலங்குகள், அவற்றின் தயாரிப்புகள் அல்லது அவற்றின் வழிவந்த பொருட்களைப் பயன்படுத்துவது, விற்பது அல்லது வாங்குவது ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானம் எடுக்குமாறு தலாய்லாமா 2006 ஜனவரியில் அறிவுரை கூறினார். வேட்டையாடப்பட்ட புலி மற்றும் சிறுத்தைப்புலியின் தோல்களுக்கு கிராக்கிக்கு இது நீண்டகால வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கப்படுகிறது.

வனமீட்பு
இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரான பில்லி அர்ஜான் சிங் என்பவரே வனமீட்பு செயலில் முதலில் ஈடுபட்டவர். அவர் தான் வளர்த்துவந்த விலங்குகள் பூங்காவில் பிறந்த தாரா என்ற பெண் புலியை 1978 ஆம் ஆண்டில் தத்வா தேசியப் பூங்காவின் காடுகளில் மீண்டும் விட்டார். ஒரு பெண்புலி பலரைக் கொன்று கொண்டிருந்தது. பின்னர் அது சுட்டுக் கொல்லப்பட்டது இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இதையே பின்பற்றினர். அரசு அதிகாரிகள் அந்தப் புலியே தாரா எனவும் சிங் அது தாரா இல்லை எனவும் ஒருவருக்கொருவர் எதிர்த்து வாதிட்டுக்கொண்டனர். தாரா பகுதியளவு வங்கப்புலியாக இருந்ததால் அதன் அறிமுகத்தினால், அந்தப் பகுதியைச் சேர்ந்த புலிகளின் மரபணுத் தொகுதியில் கலப்படம் ஏற்பட்டது. அது வளர்க்கப்பட்ட இடமான ட்வைக்ராஸ் விலங்கியல் பூங்காவில் சரியாக இல்லாத பதிவுகளின் காரணமாக இந்த உண்மை முதலில் தெரியவில்லை. இதனால் வனமீட்புச் செயல் மதிப்பை இழந்தது.

சீனப் புலிகளைக் காப்போம்
சீனப் புலிகளைக் காப்போம் என்ற அமைப்பு சீனாவின் மாநில வனப்பாதுகாப்பு ஆணையம் மற்றும் சீனப் புலிகள் தென்னாப்பிரிக்க அறக்கட்டளையும் இணைந்து சீனப் புலிகளை மீண்டும் காடுகளில் விடுவது தொடர்பான ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. பெய்ஜிங்கில் 2002 நவம்பர் 26 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் சீனாவில் தென்சீனப் புலிகள் உள்ளிட்ட புலிகளை மீண்டும் காட்டில் விட்டு அவற்றின் இயல்பான காட்டை உருவாக்கித் தரும் ஒரு பிரதான சரணாலயத்தை உருவாக்கி அதன் மூலம் ஒரு சீனப் புலிப் பாதுகாப்பு மாதிரியை வழங்கியது. சில காப்பகங்களில் பிறந்த தென்சீனப் புலிகள் அவற்றின் வேட்டையாடும் திறன்களை மீண்டும் பெறும் பயிற்சிக்காக அவற்றைத் தென்னாப்பிரிக்காவில் விட்டு மிகவும் அருகிவரும் தென்சீனப் புலிகளை மீண்டும் காட்டில் விடுவதையே சீனப் புலிகளைக் காப்போம் அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் ஒரு புலிகள் சரணாலயத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சரணாலயம் தயாரானதும் அந்தப் புலிகளை மீண்டும் சீனாவின் சரணாலயத்தில் விடப்படும். பயிற்சிக்கு விடப்பட்ட புலிகளின்வழி உருவான குட்டிகள் சீனாவின் பிரதான சரணாலயத்தில் விடப்படும். முதலில் விடப்பட்ட விலங்குகள் தொடர்ந்து இனப்பெருக்கத்தைத் தொடர தெனாப்பிரிக்காவிலேயே இருக்கும்.

இதற்குத் தென்னாப்பிரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்கு அங்கு தென்சீனப் புலிகளுக்குத் தேவையான திறமையும் வளங்களும், நிலமும் விளையாட்டு வாய்ப்பும் கிடைப்பதே காரணமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் காடுகளில் விடப்பட்ட தென்சீனப் புலிகள் வெற்றிகரமாகத் தாமே சொந்தமாக வாழவும் வேட்டையாடவும் தேவையான திறமையைப் பெற்றுவிட்டன. இந்தத் திட்டம் காடுகளில் விடப்பட்ட தென்சீனப் புலிகளின் இனப்பெருக்கத்திற்கும் உதவியது. இந்தத் திட்டத்தின்போது 5 புலிக்குட்டிகள் பிறந்தன. இந்த 2வது தலைமுறைக் குட்டிகள் தமது தாயிடமிருந்தே வேட்டையாடுதல் மற்றும் வாழ்தலுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

மனிதர்களிடையே உள்ள உறவு
புலி-இரையாக[தொகு]

இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யானையில் இருந்தபடி புலி வேட்டை.
ஆசியாவின் ஐந்து பெரிய விளையாட்டு விலங்குகளில் புலியும் ஒன்றாக இருந்தது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு காலத்தில் புலி வேட்டை என்பது மிக அதிக அளவில் நடைபெற்ற நிகழ்வாக இருந்தது. காலனியாதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் செல்வச்செழிப்புமிக்க மாநிலங்களின் மஹராஜாக்களால் கௌரவமிக்க பாராட்டுக்குரிய விளையாட்டாப் போற்றப்பட்டது. சில வேட்டைக்காரர்கள் புலிகளை நடந்து சென்று வேட்டையாடினர். பிறர் உயர்பந்தல்களில் அமர்ந்துகொண்டு ஆடு அல்லது மாட்டை இரையாகப் பயன்படுத்தியும் வேட்டையாடினர். இன்னும் சிலர் யானையின் மீது அமர்ந்தபடியும் வேட்டையாடினர். சில நேரங்களில் கிராமவாசிகள் கொட்டு வாத்தியங்களை முழங்கி மிருகங்களை மரண வளையத்திற்குத் துரத்த உதவினர். புலிகளின் தோலை உரித்தல் குறித்து பல விளக்கமான வழிமுறைகள் உள்ளன. மேலும் புலிகளின் தோலுரித்துப் பதப்படுத்தலில் நிபுணர்களும் இருந்தனர்.

மனித உண்ணிப் புலிகள்

கல்கத்தா விலங்கியல் பூங்காவில் எடுக்கப்பட்ட மனித உண்ணி புலியின் ஸ்டீரியோகிராபிக் புகைப்படம் (1903); அந்தப் புலி 200 மனித உயிர்களைக் கொன்று உள்ளது.
புலிகள் வழக்கமாக மனிதர்களை இரையாக உண்பதில்லை எனினும், பிற பூனையினங்களை விடவும் அதிகமாக மனிதர்களைக் கொன்றுள்ளன. குறிப்பாகப் புலிகளின் வாழிடங்களைப் பாதிக்கும் வகையில் மக்கள் தொகையும், மரம் வெட்டுதலும் விவசாயமும் நடைபெறும் பகுதிகளில் இது அதிகமாக நிகழ்கிறது. மனிதர்களை உண்ணும் புலிகள் பெரும்பாலும் பல்லிழந்த,வயது முதிர்ந்த புலிகளே. இவை தமக்குத் தேவையான இரையை வேட்டையாடும் திறன் இல்லாமல் போவதால் மனிதர்களை உண்ண முயற்சிக்கின்றன. மனிதர்களை உண்ணும் புலிகள் என அறியப்பட்ட அனைத்துப் புலிகளுமே மெரும்பாலும் விரைவில் பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு விட்டன அல்லது விஷம் வைத்துக் கொல்லப்பட்டு விட்டன. தொடர்ந்து மனிதர்களைக் கொல்லும் புலிகள் கூட மனித உண்ணிச் சிறுத்தைப் புலிகள்போல மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதில்லை. அவை வழக்கமாகக் கிராமத்தின் வெளிப்புறத்தில் இருக்கும். இருப்பினும் கிராமங்களிலும் சில நேரங்களில் தாக்குதல் நடைபெறுகிறது. இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் குறிப்பாகக் குமாயன், கர்வால் மற்றும் வங்காளத்தின் சுந்தரவன சதுப்புநிலத் தாழ்நிலங்களில் ஆரோக்கியமான புலிகள் மனிதர்களை வேட்டையாடுவது மிகக் குறிப்பிடக்கூடிய ஒரு சிக்கலாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் புலிகளின் துரித வாழிட இழப்பு காரணமாக மனிதர்களின் மீதான அவற்றின் தாக்குதல் சுந்தரவனப் பகுதிகளில் அதிகரித்துள்ளது.

ஆசியாவின் பாரம்பரிய மருத்துவம்

புலித்தோலுக்கான வழிமுறைகள்
சீனாவின் பெரும்பாலான மக்கள், புலியின் பல உடற்பகுதிகள் மருத்துவ குணமுள்ளவை எனவும் வலி நிவாரணியாகவும் பாலுணர்வூக்கியாகவும் இருப்பதாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கைகளை நிரூபிக்கப் போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. புலிகளின் உடற்பகுதிகளை மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளைச் சீனாவில் முன்பே தடை செய்துள்ளனர். புலிகளைச் சட்ட விரோதமாக வேட்டையாடுவதற்கு மரண தண்டனை வழங்குமளவுக்கு சீன அரசு அளவு மீறிச் சென்றுமுள்ளது. மேலும் உலகில் அருகிவரும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைக் காப்பதற்கான வணிக மரபின் கீழ் புலியின் உடலில் எந்தப் பகுதியையும் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது. மேலும் சீனாவிலும் 1993 ஆம் ஆண்டிலிருந்து தேசிய அளவிலான இவ்வகைக்கான வணிகத் தடை உள்ளது. இருப்பினும் அங்கு பூனையினங்களை இனப்பெருக்கம் செய்து இலாபம் அடையும் செயலில் ஈடுபட்டுள்ள புலிப் பண்ணைகள் பல உள்ளன. தற்போது இந்தப் பண்ணைகளில் காப்பகங்களிலேயே பிறந்த அரைத் திறனுள்ள 4,000க்கும் 5,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான விலங்குகள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிகளாக
விலங்கியல் பூங்காக்கள் மற்றும் மீன் காட்சியகங்களின் கூட்டமைப்பு மதிப்பிட்டபடி அமெரிக்காவில் மட்டும் 12,000 புலிகளைச் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக இது உலகில் காடுகளில் உள்ளவற்றின் எண்ணிக்கையை விட அதிகம். அதில் டெக்ஸாஸ் மாகாணத்தில் மட்டுமே 4,000 புலிகள் காப்பகப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

அமெரிக்காவின் அதிக புலி எண்ணிக்கைக்கு ஒரு பங்குக் காரணம், சட்டமாக்குவதில் உள்ள அக்கறையின்மையாகும். அமெரிக்காவின் 19 மாநிலங்களில் மட்டுமே தனிப்பட்ட முறையில் புலிகளைச் சொந்தமாக வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 15 மாநிலங்கள் உரிமம் இருந்தால் புலிகளை வளர்க்க அனுமதிக்கிறது. மேலும் 16 மாநிலங்களில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை.

அமெரிக்காவின் விலங்கியல் பூங்காக்களிலும் சர்க்கஸிலும் விலங்குகளின் இனப்பெருக்கத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதின் விளைவாக, 1980 மற்றும் 1990களில் விலங்குக் குட்டிகளின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியது. இதனால் அதன் விலை மிகவும் குறைந்தது. SPCA அமைப்பு ஹௌஸ்டன் பகுதியில் மட்டும் 500 சிங்கங்களும் புலிகளும் பிற பூனையினங்களும் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டில் வெளியான ஸ்கார்ஃபேஸ் என்ற திரைப்படத்தில் டோனி மாண்டனா ஏற்று நடித்த கதாப்பாத்திரம், அமெரிக்கனின் கனவு வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் குவிப்பதில் மிகுந்த வெறி கொண்டவராக நடித்திருப்பார். அதில் அவர் கண்ணோட்டத்தில் வீட்டில் இருக்க வேண்டியவற்றில் ஒரு செல்லப் பிராணியாகப் புலியும் இருக்கும்.

சீனாவின் புராணம் மற்றும் கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ள புலி, சீன இராசியைக் குறிக்கும் 12 விலங்குகளில் ஒன்றாகும். மேலும் பல்வேறு சீனக் கலை மற்றும் தற்காப்புக் கலைகளில் புலியானது பூமியின் சின்னமாகவும் சீன ட்ராகனுக்கு- இணையானதாகவும் இடம்பெறுகிறது. புலியும் ட்ராகனும் முறையே பொருள் மற்றும் ஆத்மாவைக் குறிக்கின்றன. உண்மையில் தென் சீனத் தற்காப்புக் கலையான ஹுங் கா, புலி மற்றும் கொக்கு ஆகியவற்றின் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட கலையாகும். 

புத்த மதத்தில் அறிவற்ற மூன்று உயிரினங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. அதில் குரங்கு பேராசையையும், மான் காதல் நோயையும், புலி கோபத்தையும் குறிக்கின்றன.

சாலை பாதுகாப்புப் புலி, இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பேலூரின் ஹோய்சாலா பேரரசின் சின்னம்.
தங்குஸிக் மக்கள் சைபீரியன் புலியை ஒரு தெய்வமாகவே கருதினர். அதை "தாத்தா" அல்லது "கிழம்" என அழைத்தனர். உடேஜ் மற்றும் நனாய் மக்கள் அதை "அம்பா" என அழைத்தனர். மஞ்சு மக்கள் சைபீரியன் புலியை ஹூ லின் ராஜா எனக் கருதினர்.

பரவலாக வழிபடப்படும் இந்துக் கடவுளும் தேவி-பார்வதியின் ஒரு அம்சமுமானதுர்கா, பத்துக் கரங்களுடன் போர்க்களத்திற்கு பெண்புலி அல்லது (பெண் சிங்கத்தில்) பவனி வரும் போர் வீராங்கனையாக விவரிக்கப்படுகிறார். தென்னிந்தியக் கடவுள் ஐயப்பனும் புலியில் பவனி வருபவராக விளக்கப்படுகிறார்.

புலியானது வங்காள தேசம், நேபாளம், இந்தியா (வங்கப் புலி) மலேஷியா (மலேசியா), வட கொரியா மற்றும் தென் கொரியா (சைபீரியன் புலி) ஆகிய நாடுகளின் தேசிய விலங்காகத் திகழ்கிறது.

உலகின் மிகப் பிடித்தமான விலங்கு
அனிமல் ப்ளானெட் நிகழ்த்திய வாக்கெடுப்பில், புலி சிறிய வித்தியாசத்தில் நாயை வென்று உலகின் மிகப் பிடித்த விலங்காகத் தேர்ந்தெடுக்கபட்டது. இந்த வாக்கெடுப்பில் 73 நாடுகளிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட பாவையாளர்கள் வாக்களித்தனர். மொத்த வாக்குகளில் புலிகளுக்கு 21% வாக்கும் நாய்களுக்கு 20% வாக்கும், டால்ஃபின்களுக்கு 13% வாக்கும், குதிரைகளுக்கு 10% வாக்கும், சிங்கங்களுக்கு 9% வாக்கும், பாம்புகளுக்கு 8% வாக்கும், அவற்றைத் தொடர்ந்து யானைகள், சிம்பான்ஸிகள், உராங்குட்டான்கள் மற்றும் திமிங்கலங்கள் ஆகியவையும் இடம்பிடித்தன.

அனிமல் ப்ளானெட்டில் பணி புரிந்த விலங்குகள் நடத்தை ஆய்வாளரான கேண்டி டி'சா என்பவர் இவற்றைப் பட்டியலிட்டு மேலும் கூறியதாவது: "வெளித்தோற்றத்திற்கு மிரட்டும் விதமாகவும், அச்சுறுத்தும் ஆற்றலுடையதாகவும் தோன்றினாலும் அகத்தில் அமைதியாகவும் கூரிய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனும் கொண்ட புலிகள் நம்மைப் போன்றதே".

உலகளாவிய வனவிலங்குக் கூட்டிணையப் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச விலங்கினங்களின் அதிகாரியான கால்லம் ரேங்கின், இந்த முடிவுகள் அவருக்கு நம்பிக்கையளித்திருப்பதாகக் கூறினார். "மக்கள் புலியைத் தமது விருப்பமான விலங்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், மக்கள் புலிகளின் முக்கியத்துவத்தையும் அவை காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வெகுவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதே பொருள்" எனக் கூறினார்.

********************************************************************************  
                        சர்வதேச புலிகள் தினம்

சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 29 ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த நூற்றாண்டுகளில் புலிகளின்
எண்ணிக்கை 97 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. உலக வனவிலங்குகள் மையத்தின் புள்ளி விவரங்களின்படி தற்போது உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3200 மட்டுமே. புலிகளுக்கு மனிதர்களைத் தவிர வேறு எதிரிகள் கிடையாது. உலகில் தற்சமயம் 6 வகையான புலி இனங்களே எஞ்சியுள்ளனவாம். மேலும் 2 இனங்கள் அழிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. வேட்டையாடுதல், வாழ்விடங்களை அழித்தல் போன்ற மனித செயல்பாடுகளால் புலி இனங்கள் உலகில் அழிந்து வருகின்றன. இதனால் மறைந்து வரும் விலங்கினங்களில் ஒன்றாக புலி வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டுதான் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 
 புலிகள் பற்றிய சில அரிய தகவல்களை உலக வனவிலங்கு மையம் தெரிவித்துள்ளது. அவற்றில் சில
ஆசியாவை பூர்விடமாகக் கொண்ட அறிவியல் பெயர் பாந்திரா டைகிரிஸ். தரைவாழ் மாமிச விலங்குகளில் துருவக்கரடிகள், பிரவுன் கரடிகளை அடுத்து மிகப்பெரிய மாமிச விலங்கினம் புலிகள் ஆகும்.
புலிகள் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. தொடர்ந்து 5 கிலோமீட்டர் தூரம் வரை களைப்படையாமல் நீந்தக்கூடியதாகும். புலிகளின் கர்ஜனை ஒலி 2 கிலோமீட்டருக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாகும். புலிகள் தங்களது வாழ்விடங்களை பாதுகாக்கவும், இனப்பெருக்கத்திற்காக அழைக்கவுமே கர்ஜிக்கின்றனவாம். 
புலிகளின் உடம்பிலுள்ள வரிகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு வித்தியாசமாக இருக்கும். புலிகளின் பற்கள் மனிதர்களின் பற்களை விட 10 மடங்கு பெரியதாகும். புலிகள் மற்ற விலங்குகளைப்போல் கும்பலாக செல்லாமல் தனியாகவே வேட்டையாடச்செல்கின்றன. பொதுவாக புலிகள் இரவு நேரத்தில் மட்டுமே வேட்டையாடுகின்றன. ஒரு இரவில் மட்டும் சுமார் 10 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து வேட்டையாடும். இவற்றின் முயற்சி 90 சதவீதம் தோல்வியில் முடிகின்றனவாம். புலிகள் தனது இரையை பின்புறமாகவோ அல்லது பக்கவாட்டமாகவோ தான் வேட்டையாடுகின்றன. ஒருபோதும் இரையை முன்புறமாக சென்று வேட்டையாடுவதில்லை. பொதுவாக நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 கிலோ மாமிசத்தை உணவாக உட்கொள்கின்றன. சில வேளைகளில் புலிகள் தனது இரையினை முழுமையாக தின்று முடிப்பதற்கு 2 அல்லது 3 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. மணிக்கு 40 மைல் வேகத்தில் ஓடக்கூடிய புலிகள் ஒரே பாய்ச்சலில் 15 அடிக்கு அப்பால் காற்றில் பயணிக்கக்கூடியதாகும். புலி இனங்களில் சைபீரியன் புலிகளே மிகப்பெரிய இனமாகும். சுமத்ரா புலிகள் உலகில் மிகச்சிறிய புலி இனமாகும். உலகில் அதிக எண்ணிக்கையில் வங்காளப்புலிகளும் (2500) குறைந்த எண்ணிக்கையில் தென்சீனப்புலிகளும் (60 முதல் 80 வரை) காணப்படுகின்றன. இந்தியா, மலேசியா, மியான்மர், பங்காளதேசம், தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலி ஆகும். உலகில் அதிகம் பேருக்கு பிடித்தமான விலங்கினம் புலி என்கிறது கருத்துக்கணிப்பு.
 ************************************************************************

தேசியப்பறவை - மயில் (Pavo cristatus)

இந்தியாவில் இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரையில்  காணப்படுகின்றன. இந்திய தேசியப்பறவையான மயில் மிக அழகான பறவையாகும். இவை தோகைவிைரித்தாடும்போது உள்ளம் கொள்ளைபோகும். தோகை என்பது வால் அல்ல. அது மிக நீண்டிருக்கும் மேல்புற வால் இறகுகளேயாகும். அடர்ந்த புதர்காடுகள், இலையுதிர்காடுகள் மற்றும் மர உச்சியில் மரம் விட்டு மரம் பறக்கும்போது காணலாம். இவற்றின் எச்சரிக்கை ஒலியே காடுகளில் ஊண் உண்ணிகளை கண்டு ஒலிக்கும் முதல் குரலாகும். இவை தானியங்கள், காய்கறிகள், இளம் தளிர்கள், பூச்சிகள், ஓணான்கள், பாம்பு ஆகியவற்றை உணவாக உட்கொள்ளும். இரவில் மர உச்சியில் இருக்கும் கிளைகளில் ஓய்வெடுக்கும். ஏப்ரல் மே மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். மண்ணை கீரியும் சிலசமயம் குச்சிகள் தழைகள் புற்களாலும் தரையில் கூடமைக்கும். 4 முதல் 6 முட்டைகள் வரை இட்டு 28 நாட்கள் அடைகாத்து குஞ்சுகள் பொறிக்கும். இவை தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளதால் அதனை பாதுகாப்பது நமது கடமையாகும்.Image result for Peacock


The Indian peafowl or blue peafowl (Pavo cristatus), a large and brightly coloured bird, is a species of peafowl native to South Asia, but introduced in many other parts of the world like the United States, Mexico, Honduras, Colombia, Guyana, Suriname, Brazil, Uruguay, Argentina, South Africa, Madagascar, Mauritius, Réunion, Indonesia, Papua New Guinea and Australia.[2] The species was first named and described by Linnaeus in 1758, and the name Pavo cristatus is still in use now.

The male peacock is predominantly blue with a fan-like crest of spatula-tipped wire-like feathers and is best known for the long train made up of elongated upper-tail covert feathers which bear colourful eyespots. These stiff feathers are raised into a fan and quivered in a display during courtship. Females lack the train, and have a greenish lower neck and duller brown plumage. The Indian peafowl lives mainly on the ground in open forest or on land under cultivation where they forage for berries, grains but also prey on snakes, lizards, and small rodents. Their loud calls make them easy to detect, and in forest areas often indicate the presence of a predator such as a tiger. They forage on the ground in small groups and usually try to escape on foot through undergrowth and avoid flying, though they fly into tall trees to roost.

The function of the peacock's elaborate train has been debated for over a century. In the 19th century, Charles Darwin found it a puzzle, hard to explain through ordinary natural selection. His later explanation, sexual selection, is widely but not universally accepted. In the 20th century, Amotz Zahavi argued that the train was a handicap, and that males were honestly signalling their fitness in proportion to the splendour of their trains. Despite extensive study, opinions remain divided on the mechanisms involved.

The bird is celebrated in Indian and Greek mythology and is the national bird of India. The Indian peafowl is listed as of Least Concern by the International Union for Conservation of Nature (IUCN).