உடலுக்கு நல்லதல்ல

எந்த திசையில் படுக்கவேண்டும்
 
ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும்போது எப்படி சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருப்பானோ அத்தகைய மகிழ்ச்சியை தருகிறது கிழக்கு.


வேலை செய்வதற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ பிறந்த ஊரை விட்டு வேறு ஒரு ஊருக்கு வந்து வாழ்க்கை நடத்துகின்றவனுக்கு கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியை தருவது மேற்கு.


மாமியார் வீட்டில் தங்கும் மாப்பிள்ளைக்கு கிடைக்கும் சுகத்தை தருகிறது தெற்கு.


எந்தத்திசையில் படுத்தாலும் படுக்கலாம் ஆனால் வடக்கு திசையில் மட்டும் தலைவைத்து படுக்கக்கூடாது.


பூமியின் வடமுனையிலிருந்து தென்முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக்கொண்டிருக்கும். உறங்கும்போது வடக்கில் தலையிருந்தால் மூளைப்பகுதி அந்த கதிரிழுப்பு விசையால் ஓய்வு பெறுவது குறைந்துவிடும். எனவேதான் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது என்கிறார்கள்.  


*********************************************************************************

                                   கொசுவர்த்திச்சுருள்
 
வெயில் காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால், கூடவே கொசுக்களின் தொல்லையும் தொடங்கிவிடும். பகல் இரவு என்று பாராமல் எப்போதும் எங்கேயும் கொசுத்தொல்லை அதிகரித்து வரும். கொசுக்கடி பல அபாயங்களுக்கு இட்டுச்செல்லும் என்பதால் கொசுவர்த்திச்சுருள், மேட், லிக்யூட், கிரீம் என்று பலவற்றையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கொசுக்களுக்கு எதிரான அரணாக விளங்கும் இவை பல ஆபத்துகளையும் அள்ளி வந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்களும் ஆய்வாளர்களும். கொசுவர்த்தி
சுருள்களிலும், மேட்கள், லிக்யூட்களிலும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயன கலவைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, இவற்றை நாம் சுவாசிக்கும் அளவு, அறைக்குள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றை பொறுத்து இவற்றால் ஏற்படும் தீங்குகளின் அளவு அமையும். கொசுக்களை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்தி சுருள், மேட்கள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் அவருக்கு நுரையீரலில் ஒருவகை ஒவ்வாமை ஏற்பட்டு நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவிற்கு உரிய காற்றை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. கொசு மேட்டிலிருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தை தொடர்ந்து சுவாசித்தால் அதற்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கொசுவிரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. கொசுவிரட்டிகளில் உள்ள டையாக்சின் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் எடையை குறைய செய்யக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். வேறு வழியில்லாமல்தான் கொசுவிரட்டிகளை நாடுகிறோம். வேறு என்னதான் வழி என்கிறீர்களா?
சுற்றுப்புறத்தை தூய்மையாக தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுங்கள். கொசுவலையை பயன்படுத்துங்கள்.