விவேகானந்தரின் பொன்மொழிகள்

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:- 

*சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார். 

* ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.

* உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.

* தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை. 

***************************************************************************
பொன்மொழி:
*****************
லட்சியம் உடையவன்
ஆயிரம் தவறுகள் செய்தால்
அது இல்லாதவன்
ஐயாயிரம் தவறுகள் செய்வான்
என்பது உறுதி.
ஆதலால் லட்சியம் மிகவும் தேவை.
- விவேகானந்தர்.

*******************************************************************
ஒருவன் எந்த வேலையைச் செய்கிறான் என்பதைவிட
அதை எப்படிச் செய்கிறான் என்பதைப் பொறுத்தே
ஒருவனை மதிப்பிடவேண்டும்.  

 **************************************************************************
பிறருக்காகச் செய்யும் மிகச்சிறிய முயற்சியும்
உள்ளிருக்கும் சக்தியை எழுப்புகிறது
 

***************************************************************************
ஒரு கருத்தை எடுத்துக் கொள், அதையே கனவு காண்
அந்தக்கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா
வெற்றிக்கு இதுதான் வழி.

*****************************************************************************

எனது சகோதரர்களே நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம்
உறங்குவதற்கு இது நேரமில்லை, எதிர்கால இந்தியா
நம் உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது
 

**************************************************************************
இந்தப்பூமியில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக
ஏதேனும் ஒன்றை விட்டுச்செல்லுங்கள்  

********************************************************************************
ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.
மிருகபலத்தால் ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எழுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்
உன்னை வலிமை படைத்தவன் என்று நினைத்தால்
வலிமை படைத்தவன் ஆகிறாய்.

**************************************************************************
 மேலைநாட்டு விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை லட்சியங்களாகும்.
 ***************************************************************************

 யார் ஒருவர் எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
******************************************************************************

 துன்பம் விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல் வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிகிறது.
 ******************************************************************************

அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. நம்முடைய மனத்தை ஒரு முகப்பபடுத்துவதே அந்த வழி.
***************************************************************************
இந்த பூமியில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் ஒன்றை விட்டுச்செல்லுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கும் கல்லுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
*****************************************************************************
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனைத்தவிர பிற ஆண்களை தன் பிள்ளைகாகப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு ஆணும் தன் மனைவியைத்தவிர பிற பெண்களைத் தன் தாயாகக் காணவேண்டும்.