தகவல்கள்

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.

**************************************************************************


ஒரு கிராமம் பல தலைவர்கள்
தேசத்தை காக்க தனது இன்னுயிர்களை நீத்த தலைவர்கள், சுதந்திரத்திற்காக போராடிய தியாகத்தலைவர்கள், வீரத்தின் விளைநிலமாக விளங்கியவர்கள், சுதேசியத்தைக் காப்பாற்ற ஆங்கிலேயருக்கு எதிராக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி இந்திய தேசியப்படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்த நேதாஜி, அகிம்சை வழியே அறவழி அதுதான் என்றைக்கும் வெற்றி வழி என்று போராடிய காந்திஜி திருக்குறளை தந்த திருவள்ளுவர் என தலைவர்களின் பெயர்களில் தெருக்களின் பட்டியல் ஒரு கிராமத்தில் நீள்கிறது என்றால் வியப்பு வராதா என்ன?
    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அழகிய கிராமமாக காட்சித்தருகிறது கைலாசப்பட்டி, இங்குள்ள மலைமேல் கைலாசநாதர் அருள்பாலிக்கிறார். 900 ஆண்டுகளுக்கு முன் மலை அடிவாரத்தில் இக்கிராமம் சிறிதாக இருந்தது. பின் அப்பகுதியில் கண்மாய் உருவானதால் பெரியகுளம் மெயின் ரோட்டு பகுதி அருகே குடியேறினர். இங்கு கிராமம் தோன்றி 300 ஆண்டுகள் ஆவதாக கிராமத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
    தேசப்பற்றை வளர்க்கும் விதமாக இங்குள்ள தெருக்களுக்கு தேசத்தலைவர்கள் சுதந்திரபோராட்ட வீரர்கள் பெயர்களை சூட்டி உள்ளனர். காந்தி தெரு, காமராஜர் தெரு, வ.உ.சி தெரு, வீரபாண்டியன் தெரு, சுதந்திர வீதி, திருவள்ளுவர் தெரு என தெருக்களுக்கு தேசப்பற்றுடனும் வீரத்தின் அடையாளமாகவும் பெயர் சூட்டி பெருமை சேர்த்துள்ளனர்.

நன்றி. தினமலர் 08.02.14

*************************************************************************

வேடிக்கையான ஆனால் உண்மையான ஒன்று .....
உலகத்திலேயே நீளமான 5 நிமிடம்
கிளாஸ்ல பீரியட் முடியப்போற கடைசி 5 நிமிடம்.
உலகத்திலேயே மிகவும் குறைவான 5 நிமிடம்
எக்ஸாம் எழுதிகிட்டு இருக்குறப்ப கடைசி அந்த 5 நிமிடம்
*****************************************
தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது