பெண்களுக்கான ஆலோசனைகள்

உடலை இறுக்கிய உடைகள் அணியும் பெண்களின் கவனத்திற்கு…!!
இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள்.
இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. 


பெண்கள் நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம் என்று கருதுகின்றனர்.
ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல.
பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும்.
இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும்.
மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.
உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும்.
தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.
ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும்.
ஈரத்தை நன்கு உள்வாங்கும்.
உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.



********************************************************************************

வெள்ளைப்படுதல் வராம தடுக்க அஞ்சு ஆனை நெருஞ்சி்ல் இலைகளை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அலசும்போது கொழகொழ என வரும். இதை காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்தால்
வெள்ளைப்படுவது சரியாகிவிடும். இதைக்குடித்த 2 மணி நேரம் கழித்தபின் தான் சாப்பிடவேண்டும். சாப்பாட்டில் புளி சேர்க்கக்கூடாது. நாக்கிற்கு புளிப்பு தேவையெனில் தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு கைப்பிடி கட்டுக்கொடி இலையை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அலசும்போது கொழகொழ என வரும். மேலே சொன்னது போன்று இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். சாப்பாட்டில் புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்கலாம். வெள்ளைப்படுதல் முழுசா குணமாகும்.

அத்திக்காயை துவரை அல்லது பாசிப்பருப்போடு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் சீக்கிரம் குணமாகிவிடும்.