கைகள் பளபளக்க



கைகளில் ஏதேனும் ஒரு கிரீம் அல்லது பாலாடையை பூசி, மசாஜ் செய்யுங்கள். பின், கைகளை நீராவி படும்படி சிறிது
நேரம் வைத்திருங்கள். துடைத்துவிட்டு, கைகளை மெல்லிய துணியால் பத்து நிமிடம் மூடி வையுங்கள். இப்படி செய்தால், தொடர்ந்து உங்கள் கைகள் பட்டு போலாகி விடும். சிறிதளவு பாலாடையை எடுத்து, ஒவ்வொரு நகத்தின் மேலும் வைக்கவும். அதன் மீது எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, வைத்து மசாஜ் செய்யுங்கள். நகங்கள் பளபளக்கும்.