சிரிக்க


இன்ஸ்பெக்டர் ஏன் கவலையா இருக்கார்?
நம்ம கேடி கபாலி அவர் வீட்டிலேயே திருடிட்டு அவர்கிட்டயே மாமூல் கொடுத்தானாம். இவரும் பழக்க தோஷத்துல வாங்கிட்டாராம். இப்ப ஃபீல் பண்றார்.

போலிஸ் கேடியிடம்
பக்கிரி உனக்கு நான் என்ன குறை வெச்சேன் சொல்லு.... இப்படி

திடுதிப்புனு ஊரைவிட்டு போறேன்னு சொன்னா அதை தாங்கிக்கிற சக்தி எனக்கில்லை.

போலிஸ் 1. என்ன அண்ணே ஒருத்தனை வாய ஊதச்சொல்லி பார்த்திட்டு அழுதிட்டு வர்றீங்க
போலிஸ் 2. எவனுமே கள்ளச்சாராயம் குடிக்க மாட்டேங்கறானுங்க பின்ன எப்படிய்யா மாமூல் வரும்.

இன்ஸ்பெக்டர் : யோவ் கான்ஸ்டபிள் 502 ன்னா என்னய்யா ஜெயிலுக்குள்ளயிருக்கிற கேடி சல்யூட் அடிக்கிறான்..
கான்ஸ்டபிள் : எனக்கும் அவனுக்கும் ஒரே நம்பர் சார்.. யூனிபார்ம் தான் வேற.... அதான் சார்.

ஒருவர் (போலிஸ் ஸ்டேஷனில்)
    ரேடியோவில் தண்ணியை காய்ச்சி வடிகட்டி குடிக்கணும்னு சொன்னாங்க... நான் காய்ச்சும் போது கொஞ்சம் பட்டையை போட்டேன். அது தப்பா........