செய்யக் கூடாதவை!:

சமையலில் செய்யக்கூடாதவை !








**********************************************************

 * ரசம் அதிகமாக கொதிக்க கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக் கூடாது.
* தேங்காய்ப் பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாகக் கொதிக்க கூடாது. *தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக் கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.


* கீரைகளை மூடிப் போட்டு சமைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக் கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக் கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக் கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக் கூடாது.
* பிரிட்ஜில் வாழைப் பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.