பொன்மொழிகள்

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்
உன்னை வலிமை படைத்தவன் என்று நினைத்தால்
வலிமை படைத்தவன் ஆகிறாய். --- சுவாமி விவேகானந்தர்

ஒருவன் எந்த வேலையைச் செய்கிறான் என்பதைவிட


அதை எப்படிச் செய்கிறான் என்பதைப் பொறுத்தே
ஒருவனை மதிப்பிடவேண்டும்.  --- சுவாமி விவேகானந்தர் 

பிறருக்காகச் செய்யும் மிகச்சிறிய முயற்சியும்
உள்ளிருக்கும் சக்தியை எழுப்புகிறது --- சுவாமி விவேகானந்தர்

ஒரு கருத்தை எடுத்துக் கொள், அதையே கனவு காண்
அந்தக்கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா
வெற்றிக்கு இதுதான் வழி. --- சுவாமி விவேகானந்தர்

எனது சகோதரர்களே நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம்
உறங்குவதற்கு இது நேரமில்லை, எதிர்கால இந்தியா
நம் உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது --- சுவாமி விவேகானந்தர்

இந்தப்பூமியில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக
ஏதேனும் ஒன்றை விட்டுச்செல்லுங்கள் --- சுவாமி விவேகானந்தர்

மனதை எப்போதும் இளமையாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கவேண்டும்
-- அன்னை ஸ்ரீ சாரதா தேவியார்