புத்தர் பொன்மொழிகள்

1. செல்வம், புகழ், பதவி என எவ்வளவு மேன்மை பெற்றிருந்தாலும் பகுத்தறிவு இல்லாவிட்டால் மனிதன் அழிந்துபோவான்.
2. புல்லுருவி, மரத்திற்கு எதிரி, விரோத உணர்வு, மனித குலத்திற்கு எதிரி. விரோதம் இல்லாத மனிதன் எந்தச் செயல் செய்தாலும் அது வெற்றி பெறும்.
3. நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். நோயற்ற வாழ்வே பெரும் பாக்கியம். திருப்தியே பெரிய செல்வம்.
4. பயனில்லாத சொற்களை பேசுபவன் வாசனை இல்லாத மலருக்கு சமமானவன். மனதில் நினைப்பதையே சொல்லவேண்டும் இல்லாவிட்டால் மவுனமாக இருப்பதே மேல்.
5. ஆயிரம் வீண் வார்த்தைகளைப் பேசுவதை விட மனதிற்கு இதம் அளிக்கும் ஒரு வார்த்தை மேலானது.