மீன் மொய்லி


தேவையான பொருட்கள்
மீன்                                             ... அரை கிலோ
வெங்காயம்                         ... ஒன்று நீளமாக நறுக்கியது
இஞ்சி விழுது                     ... 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்               ... 10 நறுக்கியது
தக்காளி                                  ... ஒன்று நீளமாக நறுக்கியது
தேங்காய்                               ... அரை மூடி துருவியது
கார்ன் மாவு                          ... அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு              ... அரை பழம்
உப்பு மற்றும் எண்ணெய் ... தேவையான அளவு
செய்முறை
மீனை உப்புப் போட்டு அரை மணிநேரம் ஊறவைக்கவும். இதை உடையாமல் ஜாக்கிரதையாக வறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை, தக்காளி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். துருவிய தேங்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்து பிழிந்து பால் எடுத்து வைக்கவும். நீர் ஊற்றி அரைத்து இரண்டாம் பால் எடுக்கவும். இரண்டாவது எடுத்த தேங்காய்ப்பாலை வறுத்த மசாலாவில் ஊற்றி மீன் துண்டுகளை போடவும்.
இதை 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து சமைக்கவும். பின்பு முதலில் எடுத்த பாலை ஊற்றி எலுமிச்சம்பழச்சாறை சேர்த்து இறக்கவும். இப்போது மணக்கும் மீன் மொய்லி சுவையுடன் ரெடி