திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது


திருமண அழைப்பிதழ்களை கையில் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல.


ஒருவர் இன்னொருவரிடம்
பொருளொன்றை கடனாகக்கொடுக்கும்போதும்
தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை
கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால்,
கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும்
அந்த வேற்றுமை மனதில் இல்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால்,
கொடுப்பவர் கை மேலும்
வாங்குபவர் கை கீழும் இருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
நம்மவர்களின் மனதில் தோன்றக்கூடாதென்பதற்காகவே
எப்பொருளை கொடுத்தாலும்
தட்டில் வைத்துக்கொடுப்பதையே நம் முன்னோர்கள் பழக்கமாகக்கொண்டிருந்தனர்

இதே முறைதான் திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

 எனவே அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது
கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்..

நன்றி- தெட்சணா மூர்த்தி