அறிவுரைகள் மற்றும் பிற பொன்மொழிகள்

***********************************************************************
1. மிகச்சிறந்தவை கடின உழைப்பாலேயே வரும்.
2. விடா முயற்சி வெற்றியைத் தேடித்தரும்.
3. வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா திறமை?
4. ஒரு வித்தகனுக்குப்பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்.
5. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
6. கண்ணில் படாதது மனதிலும் படாது.
7. இல்லாததற்கே ஏங்கிடும் மனம்.
8. கண்ணிற்கு எட்டாவிட்டால் இதயத்திற்கும் எட்டாது.
9. வாராது இருப்போர் வழிமுறை பேணார்.
10. அரிதாகப் பார்ப்பவை விரைவாக மறந்து போகும்.

************************************************************************
மீனாக பிறந்து சாவது என்று முடிவெடுத்துவிட்டால்
பொழுதுபோக்கிற்கு மீன் பிடிப்பவனின் தூண்டிலில் சிக்காதே
பிழைப்பிற்காக மீன் பிடிப்பவனின் வலையில் சிக்கிடு
உன் மரணமும் ஒருவனை வாழவைக்கட்டும்.

************************************************************************

ஒரு பெரிய புத்தகத்தை அவசரமாகப் படித்து முடிப்பதைவிட ஒரே பக்கத்தை நன்றாக படித்து அறிவு பெறுவது மேலானது

கை தொடும் தூரத்தில் வெற்றியும் இல்லை அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.


உன் பின்னால் பேசுபவர்களைப் பற்றி நீ கவலைப்படாதே
அவர்களுக்கு ஒரு அடி முன்னால் நீ இருக்கிறாய் என்பதை மறந்துவிடாதே.


முதல்வனாக இரு அல்லது
முதல்வனாக இருப்பவனோடு இரு

வெற்றியாளனாக இரு அல்லது
வெற்றி பெற்றவர்களோடு இரு
 


**************************************************************************
காந்தியடிகளின் அறிவுரைகள்
 
1. குறைவாகப்பேசு.
2. எல்லோர் சொல்வதையும் கேள். எது சரியோ அதைச்செய்.
3. எந்த ஒரு நிமிடத்தையும் வீணடிக்காதே. குறிப்பிட்ட காலத்திற்குள் எதையும் செய்யப்பழகு.
4. கருத்தோடு ஊன்றிப்படி.
5. தினமும் முறைப்படி உடற்பயிற்சி செய்.
6. உணவு விஷயத்தில் கவனம் வை.
7. புத்திசாலிதனத்தைவிட ஆத்மபலம் மிகவும் முக்கியம்.
8. தினமும் இருமுறை பிரார்த்தனை செய்.
9. செலவு ஒவ்வொன்றுக்கும் கணக்கு வைத்துக்கொள்.

*****************************************************************************